பக்கம் எண் :

80ஆத்மாநாம் படைப்புகள்

குளிர்க்கண்ணாடிகள்

குளிர்க்கண்ணாடிகளை
அணிந்துகொண்டேன்
சாயம் பூசப்பட்ட உலகம்
ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது
சாயம் பூசப்பட்ட மனிதர்கள்
என் கண்களை உற்றுப் பார்த்தனர்
ஒருவன் என்னைக் கேட்டான்
ஏன் இந்தக் கண்ணாடி
ஆயிரம் காரணங்களை
நான் கூற எத்தனித்தேன்
உண்மையை அவன் நம்பவேயில்லை
கண்ணாடியைக் கழற்றி வைத்தேன்
உலகம்
ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது