20 அனைவரும் அவர்களே!
நெய்வேலியில் வேலையில் இருந்த கிட்டு, வேலை நேரத்தில் வடலூரில் கடைத்தெருவிற் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை வேம்பு கண்டு கேட்டான். ‘வேலை நேரத்தில் நெய்வேலியை விட்டு வடலூரில் இருக்கின்றாயே?’ கிட்டு : | நான் நெய்வேலியில் இருந்தேனா வடலூரில் இருந்தேனா என்று தீர்மானிப்பவன் பார்ப்பான் தானே. | | | வேம்பு : | மேற்பார்வையாளர் நீ அலுவலிடத்தில் இல்லை என்று குறித்துக்கொண்டு போய்விட்டால்... | | | கிட்டு : | அலுவலகத்தில் நான் இருந்தேனா இல்லையா என்று பார்க்க வருகின்ற பார்வையாளன் பார்ப்பான் தானே! | | | வேம்பு : | எழுதாமற் கிடக்கும் உன் எழுத்துப் புத்தகத்தைக் கொண்டு உன்மேற் குற்றம் சாட்ட மாட்டானா? | | | கிட்டு : | எழுதாமல் கிடக்கிறது-எழுதிக் கிடக்கிறது என்று தீர்மானிப்பவன் பார்ப்பான் தானே! |
|