|
100. தூது கண்டு அழுங்கல்
|
|
| |
|
| வளைந்து
நின்று உடற்றும் மலி குளிர்க்கு உடைந்து |
|
| முகில்-துகில்
மூடி மணி நெருப்பு அணைத்துப் |
|
| புனம்
எரி கார்-அகில் புகை பல கொள்ளும் |
|
| குளவன்
வீற்றிருந்த வளர் புகழ்க் குன்றமும், |
|
| புதவு
தொட்டெனத் தன் புயல் முதிர் கரத்தினை |
5
|
| வான்
முறை செய்த கூன் மதிக் கோவும், |
|
| தெய்வம்
அமைத்த செழுந் தமிழ்ப் பாடலும், |
|
| ஐந்தினில்
பங்கு செய்து இன்பு வளர் குடியும், |
|
| தவல்
அருஞ் சிறப்பொடு சால்பு செய்து அமைந்த |
|
| முது
நகர்க் கூடலுள்--மூவாத் தனி முதல் |
10
|
| (ஏழ்
இசை முதலில் ஆயிரம் கிளைத்த |
|
| கானம்
காட்டும் புள்-அடித்துணையினர் |
|
| பட்டடை
எடுத்து, பாலையில் கொளுவி, |
|
| கிளையில்
காட்டி, ஐம் முறை கிளத்தி, |
|
| குரலும்
பாணியும் நெய்தலில் குமட்டி, |
15
|
| விளரி
எடுத்து, மத்திமை விலக்கி, |
|
| ஒற்றைத்
தாரி ஒரு நரம்பு இரட்ட, |
|
| விழுந்தும்
எழுந்தும் செவ்வழி சேர்த்தி, |
|
| குருவி
விண் இசைக்கும் அந்தரக் குலிதம் |
|
| புறப்படு
பொதுவுடன் முல்லையில் கூட்டி, |
20
|
| விரிந்தவும்
குவிந்தவும் விளரியில் வைத்து, |
|
| தூங்கலும்
அசைத்தலும் துள்ளலும் ஒலித்தலும் |
|
| ஆங்கு-அவை
நான்கும் அணி உழை ஆக்கி, |
|
| பூரகம்,
கும்பகம், புடை எழு விளரி, |
|
| துத்தம்,
தாரம், கைக்கிளை, அதனுக்கு |
25
|
| ஒன்றினுக்கு
ஏழு நின்று நனி விரித்து, |
|
| தனி
முகம் மலர்ந்து தம் இசை பாட, |
|
| கூளியும்
துள்ள, ஆடிய நாயகன்) |
|
| இணை
அடி ஏத்தும் இன்பினர்க்கு உதவும் |
|
| திருவறம்
வந்த ஒருவன் தூதுகள், |
30
|
| இன்பமும்,
இயற்கையும், இகழாக் காமமும், |
|
| அன்பும்,
சூளும், அளியுறத் தந்து, என் |
|
| நெஞ்சமும்,
துயிலும், நினைவும், உள்ளமும், |
|
| நாணமும்,
கொண்ட நடுவினர்--இன்னும் |
|
| கொள்வதும்
உளதோ? கொடுப்பதும் உளதோ?-- |
35
|
| செய்
குறி இனிய ஆயின்: |
|
| கவ்வையின்
கூறுவிர், மறைகள் விட்டு எமக்கே. |
|