12. முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல்
 
 
குரவம் மலர்ந்த குவை இருட் குழலீ!  
இருவேம், ஒருகால், எரி அதர் இறந்து,  
விரிதலை, தோல்முலை, வெள் வாய், எயிற்றியர்க்கு  
அரும் புது விருந்து எனப் பொருந்தி, மற்று-அவர் தரும்  
இடியும் துய்த்து, சுரைக் குடம் எடுத்து
5
நீள் நிலைக் கூவல் தெளிபுனல் உண்டும்,  
பழம் புற் குரம்பையிடம் புக்கு இருந்தும்,  
முடங்கு அதள் உறுத்த, முகிழ்நகை எய்தியும்,  
உடன்உடன் பயந்த கட ஒலி ஏற்றும்,  
நடைமலை எயிற்றினிடைத் தலை வைத்தும்,
10
உயர்ந்த இன்பு-அதற்கு, ஒன்று உவமமும் உண்டு எனின்,  
(முலை மூன்று அணைந்த சிலைநுதல்-திருவினை  
அரு மறை விதிக்கத் திருமணம் புணர்ந்து,  
மதிக் குலம் வாய்த்த மன்னவன் ஆகி,  
மேதினி புரக்கும் விதியுடை நல் நாள்,
15
நடுவூர் நகர் செய்து, அடுபவம் துடைக்கும்  
அருட்குறி நிறுவி, அருச்சனை செய்த  
தேவ நாயகன்) கூடல் வாழ் இறைவன்  
முண்டகம் மலர்த்தி, முருகு அவிழ் இரு தாள்  
உறைகுநர் உண்ணும் இன்பமே
20
அறையல் அன்றி, மற்றொன்றினும் அடாதே!  
உரை