| 13.
நிலவு வெளிப்பட வருந்தல் |
|
|
|
|
| நண்ணிய
பாதி பெண்ணினர்க்கு அமுதம் |
|
| அடு
மடைப்பள்ளியின் நடு அவதரித்தும், |
|
| திரு
வடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும், |
|
| முக்கணில்
அருட்கண் முறைபெற முயங்கியும், |
|
| படி
இது என்னா அடி முடி கண்டும், |
5
|
| புண்ணிய
நீறு எனப் பொலி கதிர் காற்றியும், |
|
| நின்றனை;
பெரு மதி! நின்-தொழுதேற்கும் |
|
| நன்னரின்
செய்குறும் நன்றி ஒன்று உளதால்; |
|
| ஆயிரம்
தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து, |
|
| ஓரொரு
பனிக் கலை ஒடுங்கி நின்று அடைதலின்-- |
10
|
| கொலை
நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த |
|
| புகர்முகப்
புழைக் கை ஒரு விசை தடிந்தும், |
|
| மது
இதழ்க் குவளை என்று அடுகண் மலர்ந்த |
|
| நெடுஞ்
சுனை புதைய, புகுந்து எடுத்து அளித்தும்; |
|
| செறிபிறப்பு,
இறப்பு, என இரு வகை திரியும் |
15
|
| நெடுங்
கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை, |
|
| முன்னையின்
புனைந்தும், முகமன் அளித்தும்; |
|
| தந்த
எம் குரிசில், தனி வந்து, எமது |
|
| கண்
எனக் கிடைத்து, எம் கண் எதிர் நடு நாள்-- |
|
| (சமயக்
கணக்கர் மதி வழி கூறாது, |
20
|
| உலகியல்
கூறி, 'பொருள் இது' என்ற |
|
| வள்ளுவன்
தனக்கு, வளர் கவிப் புலவர் முன், |
|
| முதற்கவி
பாடிய முக்கட் பெருமான்) |
|
| மாதுடன்
தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்- |
|
| தன்னை
நின்று உணர்ந்து, தாமும் ஒன்று இன்றி, |
25
|
| அடங்கினர்
போல, நீயும், |
|
| ஒடுங்கி
நின்று அமைதி, இந் நிலை அறிந்தே! |
|