| 14.
தேர் வரவு கூறல் |
|
|
|
|
| சலியாப்
பராரைத் தமனியப் பொருப்பு எனும் |
|
| ஒரு
கால் சுமந்த விண் படர் பந்தரின், |
|
| மூடிய
நால் திசை முகில்-துகில் விரித்து; |
|
| பொற்சிலை
வளைத்து, வாயில் போக்கி; |
|
| சுருப்பு
அணி நிரைத்த கடுக்கை அம் பொலந் தார் |
5
|
| நிரைநிரை
நாற்றி; நெடுங் காய் மயிர் அமைத்து; |
|
| ஊதையில்
அலகு இட்டு; உறை புயல் தெளித்து; |
|
| போற்றுறு
திருவம் நால் திசைப் பொலிய; |
|
| மரகதத்
தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப; |
|
| குடத்தியர்
இழுக்கிய அளை சிதறிய போல் |
10
|
| கிடந்தன
ஆம்பி பரந்தன மறைப்ப, |
|
| பிடவு
அலர் பரப்பிப் பூவை பூ இட; |
|
| [உயர்
வான் அண்டர் கிளை வியப்பு எய்த,] |
|
| உறவு,
இணை, நட்பு, கிளை, வியப்பு எய்த, |
|
| முகில்
முழவு அதிர; ஏழ் இசை முகக்கும் |
15
|
| முல்லை
யாழொடு சுருதி வண்டு அலம்ப; |
|
| களவு
அலர் சூடி, புறவு பாட்டு எடுப்ப; |
|
| பசுந்
தழை பரப்பிக் கண மயில் ஆல; |
|
| முல்லை
அம் திருமகள், கோபம் வாய் மலர்ந்து, |
|
| நல்
மணம் எடுத்து, நாள் அமைத்து அழைக்க-- |
20
|
| வரி
வளை முன்கை வரவர இறப்பப் |
|
| போன
நம் தனி நமர், புள் இயல் மான் தேர், |
|
| கடு
விசை துரந்த கான் யாற்று ஒலியின், |
|
| எள்ளினர்
உட்க, வள் இனம் மடக்கி, முன் |
|
| தோன்றினர்:
ஆகலின், நீயே, மடமகள்! |
25
|
| (முன்
ஒரு காலத்து, அடுகொலைக்கு அணைந்த |
|
| முகில்
உருப் பெறும் ஓர் கொடுமரக் கிராதன், |
|
| அரு
மறைத் தாபதன் அமைத்திடு செம்மலை, |
|
| செருப்புடைத்
தாளால், விருப்புடன் தள்ளி, |
|
| வாய்
எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த |
30
|
| அமுது
கடல் தள்ளும் மணி நீர் ஆட்டி, |
|
| பின்னல்
விட்டு அமைத்த தன் தலை மயிர் அணை |
|
| திரு
மலர் விண் புக மணி முடி நிறைத்து, |
|
| வெள்
வாய் குதட்டிய விழுதுடைக் கருந் தடி |
|
| வைத்து
அமையாமுன் மகிழ்ந்து அழுது உண்டு, அவன் |
35
|
| மிச்சிலுக்கு
இன்னும் இச்சை செய் பெருமான்) |
|
| கூடல்
நின்று ஏத்தினர் குலக் கிளை போலத் |
|
| துணர்ப்
பெறு கோதையும் ஆரமும் புனைக; |
|
| புதை
இருள் துரக்கும் வெயில் மணித் திருவும், |
|
| தண்ணம்
பிறையும், தலை பெற நிறுத்துக; |
40
|
| இறை
இருந்து உதவா நிறை வளைக் குலனும்; |
|
| பெருஞ்
சூடகமும், ஒருங்கு பெற்று அணிக; |
|
| நட்டுப்
பகையினர் உட்குடி போல, |
|
| உறவு
செய்து ஒன்றா நகை தரும் உளத்தையும், |
|
| கொலையினர்
நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும் |
45
|
| ஐம்
பால் குழலையும், அணி நிலை கூட்டுக; |
|
| விருந்து
கொண்டு உண்ணும் பெருந் தவர் போல, |
|
| நீங்காத்
திருவுடை நலனும் |
|
| பாங்கில்
கூட்டுக, இன்பத்தில் பொலிந்தே! |
|