| 16.
வெறி விலக்கல் |
|
| |
|
| உழைநின்றீரும்,
பிழை அறிந்தீரும், |
|
| பழங்
குறி கண்ட நெடுங் கண் மாதரும்-- |
|
| ஒன்று
கிளக்க, நின்று, இவை கேண்மின்: |
|
| (ஒரு பால்
பசுங்கொடி திருநுதல் பொடித்த |
|
| குறு வெயர்ப்பு
ஒழுக்கு எனப் பிறை அமுது எடுக்க. |
5
|
| படிறர்
சொல் எனக் கடுவு நஞ்சு இறைப்ப, |
|
| அண்டப்
பொற் சுவர் கொண்ட அழுக்கை |
|
| இறைத்துக்
கழுவுவதென்னக் கங்கைத் |
|
| துறை கொள்
ஆயிரம் முகமும் சுழல, |
|
| அப் பெருங்
கங்கை கக்கிய திரை எனக் |
10
|
| கொக்கின்
தூவல் அப்புறம் ஆக, |
|
| மாணிக்கத்தின்
வளைத்த சுவர் எனப் |
|
| பாணிக்குள்
பெய் செந் தழல் பரப்ப, |
|
| தன்னால்
படைத்த பொன் அணி அண்டம் |
|
| எண் திக்கு
அளந்து கொண்டன என்னப் |
15
|
| புரிந்த
செஞ் சடை நிமிர்ந்து சுழல, |
|
| மேருவின்
முடி சூழ் சூரியர் என்னத் |
|
| தங்கிய
மூன்று கண் எங்கணும் ஆக-- |
|
| கூடல்
மாநகர் ஆடிய அமுதை |
|
| உண்டு
களித்த தொண்டர்கள் என்ன) |
20
|
| இம் மது
உண்ண உம்மையின் உடையோர் |
|
| முருகு நாறப்
பருகுதல் செய்க; |
|
| வேலனும்
வெறிக்களன் ஏறுதல் ஆக; |
|
| அணங்கு
ஆட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க; |
|
| பிணிதர
விசித்த முருகு-இயம் துவைக்க; |
25
|
| ஐயவி
அழலொடு செய்யிடம் புகைக்க; |
|
| இன்னும்
பல தொழிற்கு, இந் நிலை நின்று, |
|
| மாறு பாடு
கூறுதல் இலனே: |
|
| ஈங்கு
இவை நிற்க--யாங்கள் அவ் அருவியில் |
|
| ஒழுக,
புக்குத் தழுவி எடுத்தும், |
30
|
| ஒரு மதி
முறித்து, ஆண்டு, இரு கவுட் செருகிய |
|
| ஏந்து
கோட்டு உம்பல் பூம் புனம், எம் உயிர், |
|
| அழிக்கப்
புகுந்த கடைக்கொள் நாளில், |
|
| நெடுங்
கை வேலால் அடும் தொழில் செய்து, |
|
| பெறும்
உயிர் தந்து மருவி அளித்த |
35
|
| பொன்
நெடுங் குன்றம் மன்னிய தோளன் |
|
| செவ்வே
தந்தமை துயர் இருப்ப, |
|
| கூறு பெயரொடு
வேறு பெயர் இட்டு, |
|
| மறி உயிர்
உண்ணக் குறுகி வந்திருந்த |
|
| தெய்வம்
கற்ற அறிவை |
40
|
| உய்யக்
கூறில், ஓர் நெஞ்சு இடம் பொறாதே. |
|