| 18.
மகிழ்ந்து உரைத்தல் |
|
| |
|
| குங்குமக்
கோட்டு அலர் உணங்கல் கடுக்கும் |
|
| பங்குடைச்
செங் கால் பாட்டு அளி அரிபிடர்க் |
|
| குரு,
வில், தோய்ந்த அரி கெழு மரகதக் |
|
| 'கல்'
எனக் கிடப்பச் சொல்லிய மேனித் |
|
| திருநெடு
மாலுக்கு, ஒருவிசை, புரிந்து |
5
|
| சோதி
வளர் பாகம் ஈந்தருள் நித்தன்; |
|
| முனிவர்
ஏமுற வெள்ளிஅம் பொதுவில், |
|
| மனமும்
கண்ணும் கனியக் குனிக்கும் |
|
| புதிய
நாயகன்; பழ மறைத் தலையோன்; |
|
| கைஞ்ஞின்றவன்--செங்
கால் கண்டனர் போல, |
10
|
| விளக்கமும்,
புதுமையும், அளப்பு இல் காட்சியும், |
|
| வேறு
ஒப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும், |
|
| அறிவோர்
காணும் குறியாய் இருந்தன-- |
|
| (இருந்
திண் போர்வைப் பிணி விசி முரசம், |
|
| முன்னம்
எள்ளினர் நெஞ்சு கெடத் துவைப்ப; |
15
|
| மணம்
கொள் பேர் அணி பெருங் கவின் மறைத்தது என்று, |
|
| எழுமதி
குறைத்த முழுமதிக் கருங் கயல், |
|
| வண்டு
மருவி உண்டு களியாது, |
|
| மற்று,
அது பூத்த பொன் திகழ் தாமரை |
|
| இரண்டு
முகிழ் செய்து நெஞ்சுறப் பெருகும், |
20
|
| வற்றா
மேனி வெள்ளத்துள் மறிய; |
|
| நுனித்தலை
அந்தணர் கதழ் எரி வளர்த்துச் |
|
| சிவந்த
வாய்தோறும் வெண் பொரி சிதறிச் |
|
| செம்மாந்து
மணத்த வளரிய கூர் எரி |
|
| மும்
முறை சுழன்று, தாயர் உள் மகிழ; |
25
|
| இல்
உறை கல்லின், வெண்மலர் பரப்பி, |
|
| இலவு
அலர் வாட்டிய செங் கால் பிடித்து, |
|
| களி
தூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி; |
|
| இரண்டு
பெயர் காத்த தோலாக் கற்பு |
|
| முகன்
உறக் காணும் கரியோர் போல, |
30
|
| இடப்பால்
நிறுத்தி, பக்கம் சூழ |
|
| வடமீன்
காட்டி; விளக்கு அணி எடுத்துக் |
|
| குலவாழ்த்து
விம்ம, மண அணிப் பக்கம் |
|
| கட்புலம்
கொண்ட இப் பணி அளவும்) |
|
| வாடி
நிலை நின்றும், ஊடி ஏமாந்தும், |
35
|
| என்
முகம் அளக்கும் காலக் குறியைத் |
|
| தாமரைக்
கண்ணால் உட்புக அறிந்தும், |
|
| 'உலகம்
மூன்றும் பெறுதற்கு அரியது' என்று, |
|
| எண்ணா
வாய்மை எண்ணிக் கூறியும், |
|
| கல்
உயர் நெடுந் தோள் அண்ணல் |
40
|
| மல்
உறத் தந்த ஈர்ந் தழைதானே. |
|