|
25. நின் குறை நீயே சென்று
உரை என்றல்
|
|
|
|
|
| வேற்றுப்
பிடி புணர்ந்த தீராப் புலவி |
|
| சுற்றமொடு
தீர்க்க உய்த்த காதலின், |
|
| கருங்
கை வெண் கோட்டுச் சிறு கட் பெருங் களிறு, |
|
| உளத்து
நின்று அளிக்கும் திருத்தகும் அரு நூல் |
|
| பள்ளிக்
கணக்கர் பால் பட்டாங்கு, |
5
|
| குறிஞ்சிப்
பெருந் தேன் இறாலொடு சிதைத்து, |
|
| மென்
நடைப் பிடிக்குக் கைபிடித்து உதவி, |
|
| அடிக்கடி
வணங்கும் சாரல் நாட! |
|
| (அந்தணர்
இருக்கை அகல்வோர் சூழ்ந்தென, |
|
| நல்
நயம் கிடந்த பொன்னகர் மூடிப் |
10
|
| புலை
செய்து, உடன்று, நிலைநிலை தேய்க்கும் |
|
| தள்ளா
மொய்ம்பின், உள் உடைந்து, ஒருகால், |
|
| வேதியன்
முதலா அமரரும் அரசனும் |
|
| போது
தூய் இரப்ப, புணரா மயக்கம் |
|
| நாரணன்
நடித்த பெரு வாய்த் தருக்கத்து |
15
|
| அறிவு
நிலை போகி, அருச்சனை விடுத்த |
|
| வெள்ள
முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும், |
|
| அடுக்கு
நிலை சுமந்த வலித் தடப் பொன்மலை |
|
| கடு
முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி, |
|
| ஆயிரம்
தீ வாய் அரவு நாண் கொளீஇ, |
20
|
| மாதவன்,
அங்கி, வளி, குதை, எழு நுனி, |
|
| செஞ்சரம்;
பேர் உருள், அருக்கன், மதி ஆக; |
|
| தேர்
வரை வையம் ஆகத் திருத்தி, |
|
| சென்னி
மலை ஈன்ற கன்னி விற் பிடிப்ப; |
|
| ஒரு
கால் முன் வைத்து, இரு கால் வளைப்ப, |
25
|
| வளைத்த
வில் வட்டம் கிடைத்தது கண்டு, |
|
| சிற
நகை கொண்ட ஒரு பெருந் தீயின், |
|
| ஏழ்
உயர்வானம் பூழிபடக் கருக்கி; |
|
| அருச்சனை
விடாது, அங்கு, ஒருப்படும் மூவரில் |
|
| இருவரைக்
காவல் மருவுதல் ஈந்து, |
30
|
| மற்று
ஒருவற்கு வைத்த நடம் அறிந்து |
|
| குடமுழவு
இசைப்பப் பெறும் அருள் நல்கி, |
|
| ஒரு
நாள் அருச்சனை புரிந்திடா அவர்க்கும் |
|
| அரும்பெறல்
உளது ஆம் பெரும் பதம் காட்டி, |
|
| எரியிடை
மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு |
35
|
| உலவாப்
பொன்னுலகு அடைதர வைத்த |
|
| சுந்தரக்
கடவுள், கந்தரக் கறையோன், |
|
| மாமி
ஆடப் புணரி அழைத்த |
|
| காமர்
கூடற்கு இறைவன் கழல் இணை, |
|
| களிப்புடை
அடியர்க்கு வெளிப்பட்டு என்ன) |
40
|
| ஒரு
நீ தானே மருவுதல் கிடைத்து, |
|
| கள்ளமும்
வெளியும் உள்ள முறை அனைத்தும் |
|
| விரித்துக்
கூறி, பொருத்தமும் காண்டி-- |
|
| ஈயா
மாந்தர் பொருள் தேய்ந்தென்ன |
|
| நுண்
இடை சுமந்து ஆற்றாது |
45
|
| கண்ணிய
சுணங்கின் பெரு முலையோட்கே! |
|