| 29.
சுடரோடு இரத்தல் |
|
|
|
|
| ஈன்ற
என் உளமும், தோன்றும் மொழி பயின்ற |
|
| வளை
வாய்க் கிள்ளையும், வரிப் புனை பந்தும், |
|
| பூவையும்,
கோங்கின் பொன் மலர் சூட்டிய |
|
| பாவையும்,
மானும்--தெருள்பவர் ஊரும், |
|
| நெடுந்
திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினைப் |
5
|
| பெரு
வளி மலக்க, செயல் மறுமறந்தாங்கு-- |
|
| சேர
மறுக, முதுக்குறை உறுத்தி, |
|
| எரி
தெறும் கொடுஞ் சுரத்து இறந்தனளாக, |
|
| (நதி
மதம், தறுகண், புகர், கொலை, மறுத்த |
|
| கல்
இபம்-அதனைக் கரும்பு கொள வைத்த |
10
|
| ஆலவாய்
அமர்ந்த நீலம் நிறை கண்டன், |
|
| மறிதிரைப்
பரவைப் புடை வயிறு குழம்பத் |
|
| துலக்கு
மலை ஒரு நாள் கலக்குவ போல, |
|
| உழுவை
உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல், |
|
| உரிவை
மூடி ஒளியினை மறைத்து, |
15
|
| தரை
படு மறுக்கம் தடைந்தன போல) |
|
| விண்
உற விரித்த கரு முகிற்படாம் கொடு, |
|
| மண்ணகம்
உருகக் கனற்றும் அழல் மேனியை-- |
|
| எடுத்து
மூடி, எறிதிரைப் பழனத்துப் |
|
| பனிச்
சிறுமை கொள்ளா முள் அரை முளரி |
20
|
| வண்டொடு
மலர்ந்த வண்ணம் போல, |
|
| கண்ணும்
மனமும் களிவர மலர்த்துதி-- |
|
| மலர்தலை
உலகத்து இருள் எறி விளக்கும், |
|
| மன்
உயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும், |
|
| மறை
உகு நீர்க்குக் கருவும், கரியும், |
25
|
| வடிவம்
எட்டனுள் வந்த ஒன்றும், |
|
| சேண்
குளம் மலர்ந்த செந்தாமரையும், |
|
| சோற்றுக்
கடன் கழிக்கப் போற்று உயிர் அழிக்கும் |
|
| ஆசைச்
செருநர்க்கு அடைந்து செல் வழியும், |
|
| அருளும்
பொருளும், ஆகித் |
30
|
| திரு
உலகு அளிக்கும் பருதி வானவனே! |
|