| 30.
இன்னல் எய்தல் |
|
|
|
|
| வள்
உறை கழித்துத் துளக்கு வேல்-மகனும், |
|
| மனவு
மயிற்கழுத்து மாலையாட்டியும், |
|
| நெல்
பிடித்து உரைக்கும் குறியினோளும், |
|
| நடுங்கு
அஞர் உற்ற பழங்கண் அன்னையரும், |
|
| அயரும்
வெறியில் தண்டா அரு நோய், |
5
|
| ஈயாது
உண்ணுநர் நெடும் பழி போலப் |
|
| போகாக்
காலை புணர்க்குவது என்னோ? |
|
| (நான்கு
எயிற்று ஒருத்தல் பிடர்ப் பொலி வரைப்பகை |
|
| அறுகால்
குளிக்கும் மதுத் தொடை ஏந்த, |
|
| முள்-தாட்
செம்மலர் நான்முகத்து ஒருவன் |
10
|
| எண்ணி
நெய் இறைத்து மண அழல் ஓம்ப, |
|
| புவி
அளந்து உண்ட திரு நெடு மாலோன் |
|
| இரு
கரம் அடுக்கிப் பெரு நீர் வார்ப்ப |
|
| ஒற்றை-ஆழியன்,
முயல் உடல் தண்சுடர், |
|
| அண்டம்
விளர்ப்பப் பெரு விளக்கு எடுப்ப, |
15
|
| அளவாப்
புலன் கொள, விஞ்சையர் எண்மரும், |
|
| வள்ளையில்
கருவியில் பெரும் புகழ் விளைப்ப, |
|
| முனிவர்
செங் கரம் சென்னி ஆக, |
|
| உருப்பசி
முதலோர் முன் வாழ்த்து எடுப்ப, |
|
| மும்
முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட) |
20
|
| கூடற்கு
இறைவன் இரு தாள் இருத்தும் |
|
| கவையா
வென்றி நெஞ்சினர் நோக்க, |
|
| பிறவியும்
கூற்றமும் பிரிந்தன போலப் |
|
| பீரமும்
நோயும் மாறில், |
|
| வாரித்
துறைவற்கு என் ஆதும்மே? |
25
|