|
31. நெஞ்சோடு நோதல்
|
|
|
|
|
| பொருள்
செயல் அருத்தியின், எண் வழி தடைந்து, |
|
| நால்
திசை நடக்கும், அணங்கின் அவயவத்து, |
|
| அலை
தரு தட்டைக் கரும் புறம், மலை, மடல், |
|
| கடல்
திரை உகளும் குறுங் கயல் மானும் |
|
| கடுங்
கான் தள்ளி, தடைதரு நெஞ்சம்! |
5
|
| (கயிலைத்
தென்பால் கானகம், தனித்த |
|
| தேவர்
நெஞ்சு உடைக்கும், தாமரை யோகின் |
|
| மணக்
கோல் துரந்த குணக்கோ மதனை, |
|
| திருக்
குளம் முளைத்த கண் தாமரை கொடு |
|
| தென்
கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல் |
10
|
| திரு
மா மதுரை எனும்) திருப் பொற்றொடி, |
|
| என்
உயிர் அடைத்த பொன் முலைச் செப்பின் |
|
| மாளா
இன்பம் கருதியோ? அன்றி, |
|
| புறன்
பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி! |
|
| வளர்
முலை இன்பு எனின், மறித்து நோக்குமதி: |
15
|
| பெரும்-பொருள்
இன்பு எனின், பெரிது தடை இன்றே: |
|
| யாதினைக்
கருதியது? ஒன்றை |
|
| ஓதல்
வேண்டும்; வாழிய பெரிதே! |
|