32. வேழம் வினாதல்  
   
தன் உடல் அன்றிப் பிறிது உண் கனை இருள்  
பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல,  
பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில்--  
அண்ட நாடவர்க்கு ஆர் உயிர் கொடுத்த  
கண்டக் கறையோன், கண்தரு நுதலோன்,
5
முன் ஒரு நாளில் நால் படை உடன்று  
செழியன் அடைத்த சென்னி பாட  
எள் அருங் கருணையின், நள் இருள் நடு நாள்,  
அவன் எனத் தோன்றி அருஞ் சிறை விடுத்த  
முன்னவன் கூடல் மூதூர் அன்ன--
10
வெண் நகைச் செவ் வாய்க் கருங் குழல் மகளிர்!  
செம்மணி கிடந்த நும் பசும் புனத்து உழையால்,  
வாய் சொரி மழைமதத் தழைசெவிப் புழைக் கைக்  
குழிகண் பரூஉத் தாள் கூர்ங் கோட்டு ஒருத்தல்,  
சினை தழை விளைத்த பழுமரம் என்ன,
15
அறுகால் கணமும், பறவையும், கணையும்,  
மேகமும், பிடியும், தொடர  
ஏகியது உண்டேல், கூறுவிர் புரிந்தே.
உரை