| 35.
நலம் புனைந்து உரைத்தல் |
|
|
|
|
| அருள்
தரும் கேள்வி அமையத் தேக்க, |
|
| பற்பல
ஆசான் பாங்கு செல்பவர் போல், |
|
| மூன்று
வகை அடுத்த தேன் தரு கொழு மலர் |
|
| கொழுதிப்
பாடும் குணச் சுரும்பினங்காள்! |
|
| உளத்து
வேறு அடக்கி, முகமன் கூறாது, |
5
|
| வேட்கையின்
நீயிர் வீழ் நாள்-பூவினத்துள்-- |
|
| கார்
உடல் பிறை எயிற்று அரக்கனைக் கொன்று |
|
| வச்சிரத்
தடக்கை வரைப் பகை சுமந்த |
|
| பழ
உடல் காட்டும் தீராப் பெரும் பழி, |
|
| பனி
மலை பயந்த மாதுடன், தீர்த்தருள் |
10
|
| பெம்மான்
வாழும் பெரு நகர்க் கூடல் |
|
| ஒப்புறு
பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்-- |
|
| கொலையினர்
உள்ளமும் குறைகொள இருண்டு, |
|
| நானம்
நீவி, நாள்மலர் மிலைந்து, |
|
| கூடி
உண்ணும் குணத்தினர் கிளைபோல் |
15
|
| நீடிச்
செறிந்து, நெய்த்து உடல் குளிர்ந்த |
|
| கருங்
குழற் பெரு மணம் போல |
|
| ஒருங்கும்
உண்டோ? பேசுவிர் எமக்கே! |
|