| 36.
நாண் இழந்து வருந்தல் |
|
| |
|
| மை
குழைத்தன்ன தொள்ளிஅம் செறுவில், |
|
| கூர்வாய்ப்
பறை தபு பெருங் கிழ நாரை, |
|
| வஞ்சனை
தூங்கி, ஆரல் உண்ணும் |
|
| நீங்காப்
பழனப் பெரு நகர்க் கூடல், |
|
| கரம்
மான் தரித்த பெருமான் இறைவன் |
5
|
| பொன்
பழித்து எடுத்த இன்புறு திருவடி |
|
| உளம்
விழுங்காத களவினர் போல, என் |
|
| உயிரொடும்
வளர்ந்த பெரு நாண்-தறியினை, |
|
| வெற்பன்
காதற்கால் உலை வேலையின்-- |
|
| வலி
உடைக் கற்பின் நெடு வளி சுழற்றிக் |
10
|
| கட்புலன்
காணாது, காட்டை கெட உந்தலின்; |
|
| என்போல்,
இந் நிலை, ஆறுவரப் படைக்கும் |
|
| பேறு,
ஆங்கு ஒழிக: பெரு நாண் கற்பினர் |
|
| என்
பேறு உடையர் ஆயின், |
|
| கற்பில்
தோன்றாக் கடன் ஆகுகவே. |
15
|