| 39.
ஆடு இடத்து உய்த்தல் |
|
| |
|
| முன்னி
ஆடுக; முன்னி ஆடுக-- |
|
| குமுதமும்,
வள்ளையும், நீலமும், குமிழும், |
|
| தாமரை
ஒன்றில் தடைந்து வளர் செய்த |
|
| முளரி
நிறை செம்மகள்! முன்னி ஆடுக: |
|
| நிற்
பெறு தவத்தினை முற்றிய யானும், |
5
|
| (பல
குறி பெற்று இவ் உலகு, உயிர், அளித்த |
|
| பஞ்சின்
மெல் அடிப் பாவை கூறு ஆகி, |
|
| கருங்குருவிக்குக்
கண்ணருள் கொடுத்த |
|
| வெண்
திரு நீற்றுச் செக்கர் மேனியன்-- |
|
| கிடையில்
தாபதர் தொடை மறை முழக்கும், |
10
|
| பொங்கர்க்
கிடந்த சூற் கார்க் குளிறலும், |
|
| வல்லியில்
பரியும் பகடு விடு குரலும், |
|
| யாணர்க்
கொடிஞ்சி நெடுந் தேர் இசைப்பும், |
|
| ஒன்றி
அழுங்க, நின்ற நிலை பெருகி, |
|
| மாதிரக்
களிற்றினைச் செவிடு படுக்கும் |
15
|
| புண்ணியக்
கூடல் உள் நிறை பெருமான்-- |
|
| திருவடி
சுமந்த அருளினர் போல) |
|
| கருந்
தேன் உடைத்துச் செம்மணி சிதறி, |
|
| பாகற்
கோட்டில் படர்கறி வணக்கி, |
|
| கல்லென்று
இழிந்து, கொல்லையில் பரக்கும் |
20
|
| கறங்கு
இசை அருவிஅம் சாரல் |
|
| புறம்பு
தோன்றி, நின்கண் ஆகுவனே. |
|