|
41.
அவயவங்கூறல்
|
|
| |
|
| வீதி
குத்திய குறுந் தாட் பாரிடம் |
|
| விண்
தலை உடைத்துப் பிறை வாய் வைப்ப, |
|
| குணங்கினம்
துள்ள, கூளியும் கொட்ப; |
|
| மத்தியந்தணன்
வரம் சொலி விடுப்பத் |
|
| தில்லை
கண்ட புலிக்கால் முனிவனும், |
5
|
| சூயை
கை விடப் பாஞ்சலி ஆகிய |
|
| ஆயிரம்
பணாடவி அருந்தவத்து ஒருவனும், |
|
| கண்ணால்
வாங்கி, நெஞ்சு அறை நிறைப்ப; |
|
| திருநடம்
நவின்ற உலகு உயிர்ப் பெருமான்; |
|
| (கடல்
மாக் கொன்ற தீப் படர் நெடு வேல் |
10
|
| உருள்இணர்க்
கடம்பின் நெடுந் தார்க் கண்ணியன், |
|
| அரி-மகள்
விரும்பிப் பாகம் செய்து, |
|
| களியுடன்
நிறைந்த ஒரு பரங்குன்றமும்; |
|
| பொன்அம்
தோகையும், மணி அரிச் சிலம்பும், |
|
| நிரைத்
தலைச் சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும், |
15
|
| வண்டு
கிளை முரற்றிய பாசிலைத் துளவும், |
|
| மரகதம்
உடற்றிய வடிவொடு மயங்க, |
|
| மரக்கால்
ஆடி அரக்கர்க் கொன்ற |
|
| கவைத்
தலை மணி வேல் பிறைத் தலைக் கன்னி |
|
| வடபால்
பரிந்த பலி மணக் கோட்டமும்; |
20
|
| சூடகம்,
தோள்வளை, கிடந்து வில் வீச, |
|
| யாவர்தம்
பகையும், யாவையின் பகையும், |
|
| வளனின்
காத்து, வருவன அருளும், |
|
| ஊழியும்
கணம் என, உயர் மகன் பள்ளியும்; |
|
| உவா
மதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி, |
25
|
| மருந்து
கைக் கொண்டு வானவர்க்கு ஊட்டிய, |
|
| பாகப்பக்க
நெடியோன் உறையுளும்; |
|
| தும்பி
உண்ணாத் தொங்கல்-தேவர் |
|
| மக்களொடு
நெருங்கிய வீதிப் புறமும்; |
|
| மது
நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி, |
30
|
| சூரரக்கன்னியர்
உடல் பனி செய்யும் |
|
| கடைக்கால்
மடியும் பொங்கர்ப் பக்கமும்; |
|
| ஊடி
ஆடுநர்த் திரையொடு பிணங்கித் |
|
| தோழியின்
தீர்க்கும் வையைத் துழனியும்; |
|
| அளவா
ஊழி மெய்யொடு சூழ்ந்து, |
35
|
| நின்றுநின்று
ஓங்கி, நிலை அறம் பெருக்கும் |
|
| ஆனாப்
பெரும் புகழ் அருள் நகர்க் கூடல்) |
|
| பெண்
உடல் பெற்ற சென்னிஅம் பிறையோன்; |
|
| பொற்றகடு
பரப்பிய கருமணி நிரை என, |
|
| வண்டும்,
தேனும், மருள் கிளை முரற்றி, |
40
|
| உடைந்து
உமிழ் நறவு உண்டு, உறங்கு தார்க் கொன்றையன்- |
|
| திருவடி
புகழுநர் செல்வம் போலும், |
|
| அண்ணாந்து
எடுத்த அணி உறு வன முலை; |
|
| அவன்
கழல் சொல்லுநர் அரு வினை மானும், |
|
| மலை
முலைப் பகை அட மாழ்குறும் நுசுப்பு; |
45
|
| மற்று-அவன்
அசைத்த மாசுணம் பரப்பி |
|
| அமைத்தது
கடுக்கும், அணிப் பாம்பு அல்குல்; |
|
| ஆங்கு-அவன்
தரித்த கலைமான் கடுக்கும், |
|
| இரு
குழை கிழிக்கும் அரிமதர் மலர்க் கண்-- |
|
| புகர்
முகப் புழைக்கை துயில் தரு கனவில் |
50
|
| முடங்குளை
கண்ட பெருந் துயர் போல, |
|
| உயிரினும்
நுனித்த அவ் உருக் கொண்டு, |
|
| பொன்மலை
பனிப்பினும் பனியா |
|
| என்
உயிர் வாட்டிய தொடி இளங்கொடிக்கே. |
|