|
42.
வன்புறை எதிரழிந்து இரங்கல்
|
|
| |
|
| ஈன்ற
செஞ் சூழல், கவர்வழி பிழைத்த |
|
| வெறிவிழிப்
பிணர் மருப்பு ஆமான் கன்றினை, |
|
| மென்
நடைக் குழைசெவி பெறா, வெறுங் கரும் பிடி, |
|
| கணிப்
பணைக் கவட்டும், மணற் சுனைப் புறத்தும், |
|
| தழைக்
குற மங்கையர் ஐவனம் அவைக்கும் |
5
|
| உரற்குழி
நிரைத்த கல் அறைப் பரப்பும், |
|
| மானிட
மாக்கள் அரக்கி கைப்பட்டென, |
|
| நாச்
சுவை அடுக்கும் உணவு உவவாது |
|
| வைத்துவைத்து
எடுக்கும் சாரல் நாடன் |
|
| அறிவும்,
பொறையும், பொருள் அறி கல்வியும், |
10
|
| ஒழுக்கமும்,
குலனும், அழுக்கு அறு தவமும், |
|
| இனிமையும்,
பண்பும், ஈண்டவும் நன்றே!-- |
|
| வெடிவால்
பைங் கண் குறு நரியினத்தினை, |
|
| ஏழ்
இடம் தோன்றி, இனன் நூற்கு இயைந்து, |
|
| வீதி
போகிய வால் உளைப் புரவி |
15
|
| ஆக்கிய
விஞ்சைப் பிறை முடி அந்தணன், |
|
| (கொண்டோற்கு
ஏகும் குறியுடை நல் நாள், |
|
| அன்னையர்
இல்லத்து, அணி மட மங்கையர் |
|
| கண்டன
கவரும் காட்சி போல, |
|
| வேலன்
பேசி, மறி செகுத்து, ஓம்பிய, |
20
|
| காலம்
கோடா வரை வளர் பண்டம் |
|
| வருவன
வாரி; வண்டினம் தொடர, |
|
| கண்
கயல் விழித்து; பூத்துகில் மூடி; |
|
| குறத்தியர்,
குடத்தியர்; வழி விட நடந்து; |
|
| கருங்கால்
மள்ளர், உழவச் சேடியர், |
25
|
| நிரை
நிரை வணங்கி மதகு எதிர்கொள்ள; |
|
| தண்ணடைக்
கணவற் பண்புடன் புணரும் |
|
| வையை
மா மாது மணத்துடன் சூழ்ந்த) |
|
| கூடல்
பெருமான், பொன் பிறழ் திருவடி |
|
| நெஞ்சு
இருத்தாத வஞ்சகர் போல, |
30
|
| சலியாச்
சார்பு நிலை அற நீங்கி, |
|
| அரந்தை
யுற்று, நீடநின்று இரங்கும்-- |
|
| முருந்து
எயிற்று, இளம் பிறைக் கோலம் |
|
| திருந்திய
திரு நுதல் துகிர் இளங்கோடியே. |
|