|
53. உள் மகிழ்ந்து உரைத்தல்
|
|
|
|
|
| நுனிக்
கவின் நிறைந்த திருப் பெரு வடிவினள்! |
|
| உயிர்
வைத்து உடலம் உழன்றன போல, |
|
| நெடும்
பொருள் ஈட்ட, நிற்பிரிந்து இறந்து, |
|
| கொன்று
உணல் அஞ்சாக் குறியினர் போகும் |
|
| கடுஞ்
சுரம் தந்த கல் அழல் வெப்பம்-- |
5
|
| தேவர்
மருந்தும், தென் தமிழ்ச் சுவையும், |
|
| என்
உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி, |
|
| குருவியும்,
குன்றும், குரும்பையும், வெறுத்த நின் |
|
| பெரு
முலை மூழ்க என் உளத்தினில் தொடாமுன்-- |
|
| (வீழ்
சுற்று ஒழுக்கிய பராரைத் திரு வடக் |
10
|
| குளிர்
நிழல் இருந்து, குணச் செயல் மூன்றும், |
|
| உடலொடு
படரும் நிலை நிழல்போல |
|
| நீங்காப்
பவத்தொகை நிகழ் முதல் நான்கும், |
|
| உடன்
நிறைந்து ஒழியா உட்பகை ஐந்தும், |
|
| மதியினின்
பழித்த வடு இரு மூன்றும், |
15
|
| அணுகாது
அகற்றி, பணிமுனி நால்வர்க்கு |
|
| அறம்
முதல் நான்கும் பெற அருள் செய்த |
|
| கூடற்
பெருமான் நீடு அருள் மூழ்கி, |
|
| இரு
பதம் உள் வைத்திருந்தவர் வினைபோல்) |
|
| போயின
துணைவினை நோக்கி |
20
|
| ஏகின
எனக்கே அற்புதம் தருமே! |
|