|
54. புனல் ஆட்டுவித்தமை
கூறிப் புலத்தல்
|
|
|
|
|
| கொன்றைஅம்
துணரில் செவ்வழி குறித்து, |
|
| வால்
உளை எருக்கில் வளர் உழை பாடி, |
|
| கூவிளங்கண்ணியில்
குலக் கிளை முரற்றி, |
|
| வெண்
கூதளத்தில் விளரி நின்று இசைத்து, |
|
| வண்டும்,
தேனும், ஞிமிறும், சுரும்பும், |
5
|
| உமிழ்நறவு
அருந்தி உறங்கு செஞ் சடையோன்; |
|
| மது
மலர் மறித்துத் திருவடி நிறைத்த |
|
| நான்மறைப்
பாலனை நலிந்து உயிர் கவரும் |
|
| காலற்
காய்ந்த காலினன்; கூடல் |
|
| திரு
மறுகு அணைந்து வரு புனல் வையை |
10
|
| வரை
புரண்டென்னத் திரை நிரை துறையகத்து, |
|
| அணந்து
எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள் |
|
| மதிநுதல்
பெருமதி மலர்முகத்து ஒருத்தியை-- |
|
| ஆட்டியும்
அணைத்தும், கூட்டியும் குலவியும், |
|
| ஏந்தியும்
எடுத்தும், ஒழுக்கியும் ஈர்த்தும், |
15
|
| முழுக்கியும்
தபுத்தியும், முலை-ஒளி நோக்கியும், |
|
| விளி
மொழி ஏற்றும், விதலையின் திளைத்தும், |
|
| பூசியும்
புனைந்தும், பூட்டியும் சூட்டியும், |
|
| நிறுத்தியும்
நிரைத்தும், நெறித்தும் செறித்தும், |
|
| எழுதியும்
தப்பியும், இயைத்தும் பிணித்தும், |
20
|
| கட்டியும்
கலத்தியும், கமழ்த்தியும் மறைத்தும்-- |
|
| செய்தன
எல்லாம் செய்யலர் போல, என் |
|
| நெட்டிலை
பொலிந்த பொன் நிறை திரு உறையுளில்-- |
|
| பாசடைக்
குவளைக் சுழல் மணக் காட்டினைக் |
|
| கரு
வரிச் செங் கண் வராலினம் கலக்க, |
25
|
| வேரி
மலர் முண்டகத்து அடவி திக்கு எறிய |
|
| வெள்
உடற் கருங் கட் கயல் நிரை உகைப்ப, |
|
| மரகதப்
பன்னத்து ஆம்பல்அம் குப்பையைச் |
|
| சொரி
எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப, |
|
| படிந்து
சேடு எறியும் செங் கட் கவரியும், |
30
|
| மலை
சூழ் கிடந்த பெருங் குலைப் பரப்பும், |
|
| மலையுடன்
அலைந்த முதுநீர் வெள்ளமும், |
|
| மிடைந்து,
வயல் இரிந்து முதுகு சரிந்து உடைந்து |
|
| சிறியோன்
செரு என முறிய, போகி, |
|
| உழவக்கணத்தைக்
குலைக் குடில் புகுத்தும்-- |
35
|
| பெரு
நீர் ஊரர், நிறைநீர் விடுத்துச் |
|
| செறிந்தது
என்? எனக் கேண்மின், |
|
| மறிந்துழை
விழித்த மறி நோக்கினரே! |
|