|
55. தன்னை வியந்து உரைத்தல்
|
|
|
|
|
| விடம்
கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய்க் |
|
| கண்டல்
முள் முளைத்த கடி எயிற்று அரவக் |
|
| குழுவினுக்கு
உடைந்து குளிர் மதி ஒதுங்க, |
|
| தெய்வப்
பிறை இருந்த திரு நுதற் பேதையைக் |
|
| கண்டு
உகண்டு அரவம் மயில் எனக் கலங்க, |
5
|
| நெடுஞ்
சடைக் காட்டினை அடும் தீக்கொழுந்து என, |
|
| 'தலை
ஏது' அலையா நகு தலை தயங்க, |
|
| அணி
தலைமாலையை நிறைமதித் திரள் எனப் |
|
| புடைபுடை
ஒதுங்கி அரவு வாய் பிளப்ப, |
|
| ஒன்றினுக்கு
ஒன்று கன்றிய நடுக்கொடு |
10
|
| கிடந்து
ஒளி பிறழும் நெடுஞ் சடைப் பெருமான், |
|
| (படை
நான்கு உடன்று, பஞ்சவன்-துரந்து, |
|
| மதுரை
வவ்விய கருநட வேந்தன் |
|
| அருகர்ச்
சார்ந்து நின்று அருட்பணி அடைப்ப, |
|
| மற்று-அவன்தன்னை
நெடுந்துயில் வருத்தி; |
15
|
| இறையவன்
குலத்து முறையர் இன்மையினால், |
|
| கருதி,
தோரை கல்லொடு பிறங்க |
|
| மெய்
அணி அளறாக் கைம் முழம் தேய்த்த |
|
| பேர்
அன்பு உருவப் பசுக் காவலனை, |
|
| உலகினில்,
தமது முக் குறி ஆக, |
20
|
| மணி
முடி வேணியும், உருத்திரக் கலனும், |
|
| நிலவு
உமிழ் புண்ணியப் பால் நிறச் சாந்தமும், |
|
| அணிவித்து,
அருள் கொடுத்து, அரசன் ஆக்கி, |
|
| அடுமால்
அகற்றி, நெடு நாள் புரக்க |
|
| வையகம்
அளித்த மணி ஒளிக் கடவுள்) |
25
|
| நெடு
மதிற் கூடல் விரிபுனல் வையையுள் |
|
| பிடி
குளிசெய்யும் களிறு-அது போல, |
|
| மயில்
எனும் சாயல் ஒரு மதி நுதலியை |
|
| மருமமும்,
தோளினும், வரை அறப் புல்லி |
|
| ஆட்டுறும்
ஊரன் அன்பு கொள் நலத்தினை, |
30
|
| பொன்னுலகு
உண்டவர் மண் உலகு இன்பம் |
|
| தலைநடுக்
குற்ற தன்மை போல, |
|
| ஒன்று
அற அகற்றி உடன் கலந்திலனேல்-- |
|
| அன்ன
ஊரனை எம் இல் கொடுத்து, |
|
| தேரினும்,
காலினும், அடிக்கடி கண்டு, |
35
|
| நெட்டுயிர்ப்பு
எறிந்து, நெடுங் கண் நீர் உகுத்துப் |
|
| பின்னும்
தழுவ உன்னும் அவ் ஒருத்தி- |
|
| அவளே
ஆகுவள், யானே--தவல் அருங் |
|
| கரு
நீர்க் குண்டு அகழ் உடுத்த |
|
| பெரு
நீர் ஆழித் தொல் உலகுழிக்கே. |
40
|