|
57.
தலைவி தோழியோடு புகல்தல்
|
|
| |
|
| நடைமலை
பிடித்த சொரி எயிற்று இடங்கரை |
|
| ஆழி
வலவன் அடர்த்தன போல, |
|
| புன்
தலை மேதி புனல் எழ முட்டிய |
|
| வரி
உடற் செங் கண் வராலுடன் மயங்க, |
|
| உள்
கவைத் தூண்டில் உரம் புகுந்து உழக்கும் |
5
|
| நிறை
நீர் ஊரர்--நெஞ்சகம் பிரிக்கும் |
|
| பிணி
மொழிப் பாணனுடன் உறை நீக்கி; |
|
| நூலொடு
துவளும் தோல் திரை உரத்தின் |
|
| மால்
கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய் |
|
| வெள்ளி
குமிழ்த்த வெரூஉக் கட் பார்ப்பான் |
10
|
| கோலுடன்
படரும் குறு நகை ஒருவி; |
|
| பூ
விலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு; |
|
| திக்கு
விண் படர் நதி, திரு மதி, கயிலை, |
|
| நாமகள்,
பெருங்கடல், நாற் கோட்டு ஒருத்தல், |
|
| புண்ணியம்,
இவை முதல் வெள் உடல் கொடுக்கும் |
15
|
| புகழ்க்
கவிப் பாவலர் புணர்ச்சி இன்பு அகற்றி; |
|
| எல்லாக்
கல்வியும் இகழ்ச்சி செய் கல்வியர் |
|
| பெரு
நகைக் கூட்டமும் கழிவு செய்து; இவ் இடை, |
|
| மயக்குறு
மாலை மா மகள் எதிர-- |
|
| ஒருவழிப்
படர்ந்தது என்னத் திருமுகம் |
20
|
| ஆயிரம்
எடுத்து வான்வழி படர்ந்து, |
|
| மண்
ஏழ் உருவி மறியப் பாயும் |
|
| பெருங்
கதத் திரு நதி ஒருங்குழி மடங்க, |
|
| ஐம்
பகை அடக்கிய அருந் தவ முனிவன் |
|
| இரந்தன
வரத்தால், ஒரு சடை இருத்திய |
25
|
| கூடல்
பெருமான் குரைகழல் கூறும் |
|
| செம்மையர்
போல--கோடா |
|
| நம்மையும்
நோக்கினர், சிறிது கண் புரிந்தே. |
|