|
58.
வழிபாடு கூறல்
|
|
| |
|
| நிரை
இதழ் திறந்து மது வண்டு அருத்தும் |
|
| விருந்து
கொள் மலரும் புரிந்து உறை மணமும், |
|
| செந்தமிழ்ப்
பாடலும் தேக்கிய பொருளும், |
|
| பாலும்
சுவையும், பழமும் இரதமும், |
|
| உடலும்
உயிரும், ஒன்றியது என்ன-- |
5
|
| கண்டும்,
தெளிந்தும், கலந்த உள் உணர்வால், |
|
| பாலும்,
அமுதமும், தேனும், பிலிற்றிய |
|
| இன்பு
அமர் சொல்லி, நண்பும், மனக் குறியும், |
|
| வாய்மையும்,
சிறப்பும், நிழல் எனக் கடவார்-- |
|
| விண்ணவர்
தலைவனும் வீயா மருந்தும், |
10
|
| அளகைக்கு
இறையும் அரும் பொருள் ஈட்டமும், |
|
| கண்ணனும்
காவலும், முனியும் பசுவும், |
|
| ஒன்றினும்
தவறா ஒருங்கு இயைந்தனபோல், |
|
| நீடி
நின்று உதவும் கற்புடை நிலையினர் |
|
| தவம்
கற்று ஈன்ற நெடுங் கற்பு அன்னை! |
15
|
| (முன்
ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர், |
|
| பன்றியும்,
பறவையும், நின்று உரு எடுத்து, |
|
| கவையா
உளத்துக் காணும் கழலும், |
|
| கல்வியில்,
அறிவில், காணும் முடியும், |
|
| அளவு
சென்று எட்டா அளவினர் ஆகி, |
20
|
| மண்ணும்
உம்பரும், அகழ்ந்தும் பறந்தும், |
|
| அளவா
நோன்மையில் நெடு நாள் வருந்திக் |
|
| கண்ணினில்
காணாது, உளத்தினில் புணராது, |
|
| நின்றன
கண்டு, நெடும் பயன் படைத்த |
|
| திரு
அஞ்செழுத்தும் குறையாது இரட்ட, |
25
|
| இரு
நிலம் உருவிய ஒரு தழல்-தூணத்து, |
|
| எரி,
மழு, நவ்வி, தமருகம், அமைத்த |
|
| நாற்
கரம், நுதல்விழி, தீப் புகை கடுக் களம், |
|
| உலகு
பெற்று எடுத்த ஒரு தனிச் செல்வி, |
|
| கட்டிய
வேணி, மட்டு அலர் கடுக்கை, |
30
|
| ஆயிரம்
திருமுகத்து அருள் நதி, சிறுமதி, |
|
| பகை
தவிர் பாம்பும், நகை பெறும் எருக்கமும், |
|
| ஒன்றிய
திருஉரு நின்று நனிகாட்டிப் |
|
| பேர்
அருள் கொடுத்த) கூடல் அம் பதியோன் |
|
| பதம்
இரண்டு அமைத்த உள்ளக் |
35
|
| கதி
இரண்டு ஆய ஓர் அன்பினரே. |
|