|
59.
ஆதரம் கூறல்
|
|
| |
|
| நெடு
வரைப் பொங்கர்ப் புனம் எரி கார் அகில் |
|
| கரும்
புகை வானம் கையுறப் பொதிந்து, |
|
| தருநிழல்
தேவர்தம் உடல் பனிப்பப் |
|
| படர்ந்து
எறி கங்கை விடும் குளிர் அகற்றும் |
|
| பொன்அம்
பொருப்ப! நின் உளத்து இயையின்-- |
5
|
| கனல்தலைப்
பழுத்த திரள் பரல் முரம்பு, |
|
| வயல்
வளை கக்கிய மணி நிரைப் பரப்பே! |
|
| அதர்
விரிந்து எழுந்த படர்புகை நீழல், |
|
| பொதுளிய
காஞ்சி மருது அணி நிழலே! |
|
| தீ
வாய்ப் புலிப் பற் சிறு குரல் எயிற்றியர், |
10
|
| கழுநீர்
மிலையும் வயல் மாதினரே! |
|
| அயற்புலம்
எறியும் எயினர் மாத் துடி, |
|
| நடு
நகர்க்கு இரட்டும் களி அரி கிணையே! |
|
| இருள்
கவர் புலன் எனச் சுழல்தரும் சூறை, |
|
| மதுமலர்
அளைந்த மலையக் காலே! |
15
|
| எழுசிறை
தீயும் எருவையும் பருந்தும், |
|
| குவளை
அம் காட்டுக் குருகொடு புதாவே! |
|
| வலி
அழி பகடு வாய் நீர்ச் செந்நாய், |
|
| தழை
மடி மேதியும் பிணர் இடங்கருமே! |
|
| பட்டு
உலர் கள்ளி நெற்றுடை வாகை, |
20
|
| சுருள்
விரி சாலியும் குலை அரம்பையுமே! |
|
| (வட
திரு ஆலவாய், திருநடவூர், |
|
| வெள்ளியம்பலம்,
நள்ளாறு, இந்திரை, |
|
| பஞ்சவனீச்சரம்,
அஞ்செழுத்து அமைத்த |
|
| சென்னி
மாபுரம், சேரன் திருத்தளி, |
25
|
| கன்னி
செங்கோட்டம், கரியோன் திருஉறை-- |
|
| விண்
உடைத்து உண்ணும் கண்ணிலி ஒருத்தன், |
|
| மறிதிரைக்
கடலுள் மா எனக் கவிழ்ந்த |
|
| களவு
உடற் பிளந்த ஒளி கெழு திரு வேல், |
|
| பணிப்பகை
ஊர்தி, அருட்கொடி இரண்டுடன், |
30
|
| முன்னும்,
பின்னும், முதுக்கொள நிறைந்த |
|
| அருவிஅம்
சாரல் ஒரு பரங்குன்றம்-- |
|
| சூழ்கொள
இருந்த) கூடல்அம் பெருமான் |
|
| முழுதும்
நிறைந்த இரு பதம் புகழார் |
|
| போம்
வழி என்னும் கடுஞ் சுரம் மருதம்!-- |
35
|
| மாமை
ஊரும் மணி நிறத்து இவட்கே. |
|