|
6.
சுவடு கண்டு இரங்கல்
|
|
| |
|
| நிணம்,
உயிர் உண்ட, புலவு பொறாது, |
|
| தலை
உடல் அசைத்து, சாணை வாய் துடைத்து, |
|
| நெய்
குளித்து அகற்றும் நெடு வேல் விடலை-- |
|
| அந்தணர்
உகும் நீர்க்கு அருட்கரு இருந்து |
|
| கோடா
மறை மொழி நீடுறக் காணும் |
5
|
| கதிர்
உடல் வழி போய்க் கல்லுழை நின்றோர் |
|
| நெருப்பு
உருத்தன்ன செருத் திறல் வரைந்த |
|
| வாசகம்
கண்டு மகிழ்ந்ததும் இவணே; |
|
| துணை
விளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த் |
|
| தோகை
மண் புடைக்கும் காய்புலி மாய்க்க |
10
|
| வாய்
செறித்திட்ட மாக் கடிப்பு இதுவே; |
|
| செடித்தலைக்
கார் உடல் இடிக் குரற் கிராதர் |
|
| மறைந்து
கண்டு அக் கொலை மகிழ் உழி இந் நிலை; |
|
| தவ
நதி போகும் அரு மறைத் தாபதர் |
|
| நன்னர்
கொள் ஆசி நாட்டியது இவ் உழை; |
15
|
| கறை
அணல் புயங்கன் எரி தழல் விடத்தை |
|
| மலை
மறை அதகம் மாற்றிய அதுபோல், |
|
| கொடுமரக்
கொலைஞர் ஆற்றிடைக் கவர, |
|
| எண்ணாது
கிடைத்த புண் எழு செரு நிலைக் |
|
| கை
வளர் கொழுந்து மெய் பொடியாகென |
20
|
| சிற்றிடைப்
பெரு முலைப் பொற்றொடி மடந்தை தன் |
|
| கவைஇய
கற்பினைக் காட்டுஉழி இதுவே; |
|
| குரவம்
சுமந்த குழல் விரித்து இருந்து |
|
| பாடலம்
புனைந்த கற் பதுக்கை இவ் இடனே; |
|
| ஒட்டு
விட்டு உலறிய பராரை நெட்டாக் கோட்டு, |
25
|
| உதிர்
பறை எருவை உணவு ஊன் தட்டி, |
|
| வளை
வாய்க் கரும் பருந்து இடை பறித்து உண்ணக் |
|
| கண்டு
நின்று உவந்த காட்சியும் இதுவே; |
|
| செம்மணிச்
சிலம்பும் மரகதப் பொருப்பும், |
|
| குடுமி
அம் தழலும் அவண் இருட் குவையும், |
30
|
| முளை
வரும் பகனும் அதனிடை மேகமும், |
|
| சேயிதழ்
முளரியும் கார் இதழ்க் குவளையும், |
|
| ஓர்
உழைக் கண்ட உவகையது என்ன, |
|
| எவ்
உயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின் |
|
| அண்டப்
பெருந் திரள் அடைவு ஈன்று அளித்த |
35
|
| கன்னி
கொண்டு இருந்த மன் அருட் கடவுள் |
|
| (மலை
உருக் கொண்ட உடல் வாள் அரக்கர் |
|
| வெள்ளமும்,
சூரும், புள் இயல் பொருப்பும், |
|
| நெடுங்
கடற்கிடங்கும், ஒருங்கு உயிர் பருகிய |
|
| மணி
வேற் குமரன் முதல் நிலை வாழும் |
40
|
| குன்று
உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்) |
|
| தாள்
தலை தரித்த கோளினர் போல, |
|
| நெடுஞ்
சுரம் நீங்கத் தம் கால் |
|
| அடும்
தழல் மாற்றிய கால் குறி இவணே. |
|