|
61. கற்புப் பயப்பு உரைத்தல்
|
|
| |
|
| எழு
கடல் வளைந்த பெருங்கடல் நாப்பண் |
|
| பத்துடை
நூறு பொற்பு அமர் பரப்பும் |
|
| ஆயிரத்து
இரட்டிக் கீழ் மேல் நிலையும் |
|
| யோசனை
உடுத்த, மாசு அறு காட்சிப் |
|
| பளிக்குப்
பொருப்பில், திடர் கொள் மூதூர்க் |
5
|
| களவுடை
வாழ்க்கை உள மனக் கொடியோன் |
|
| படர்
மலை ஏழும், குருகு அமர் பொருப்பும், |
|
| மா
எனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும், |
|
| கடுங்
கனல் பூழிபடும்படி நோக்கிய |
|
| தாரை
எட்டு உறையும் கூர் இலை நெடு வேல் |
10
|
| காற்படைக்
கொடியினன் கருணையோடு அமர்ந்த |
|
| புண்ணியக்
குன்றம் புடை பொலி கூடல் |
|
| பிறைச்
சடை முடியினன், பேர் அருள் அடியவர்க்கு |
|
| ஒருகால்
தவறா உடைமைத்து என்ன, |
|
| பிரியாக்
கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த |
15
|
| நெடுங்
கயல் எறி விழிக் குறுந் தொடித் திருவினள் |
|
| தெய்வம்
என்று ஒரு கால் தெளியவும் உளத்து இலள்-- |
|
| பல
உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும் |
|
| இரு
குல வேந்தர் மறு புலப் பெரும் பகை |
|
| நீர்
வடுப் பொருவ நிறுத்திடப் படரினும், |
20
|
| ஏழ்
உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த |
|
| தன்
பழங் கூடம் தனிநிலை அன்றி, |
|
| உடு
நிலை வானப் பெரு முகடு உயரச் |
|
| செய்யும்
ஓர் கூடம் புணர்த்தின், |
|
| நெய்ம்மிதி
உண்ணாது, அவன் கடக் களிறே. |
25
|