|
66.
பிரிவு உணர்த்தல்
|
|
| |
|
| நிலையுடைப்
பெருந் திரு நேர்படுகாலைக் |
|
| காலால்
தடுத்துக் கனன்று எதிர் கறுத்தும், |
|
| நனி
நிறை செல்வ நாடும் நன் பொருளும் |
|
| எதிர்
பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும், |
|
| தாமரை
நிதியமும் வால் வளைத் தனமும் |
5
|
| இல்லம்
புகுதர இருங் கரவு அடைத்தும், |
|
| அரி
அயன் அமரர் மலை வடம் பூட்டிப் |
|
| பெருங்
கடல் வயிறு கிடங்கு எழக் கடைந்த |
|
| அமுதம்
உட்கையில் உதவுழி ஊற்றியும், |
|
| மெய்
உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல், |
10
|
| எழு
கதிர் விரிக்கும் மணி கெழு திருந்திழை! |
|
| நின்
பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுக-- |
|
| (முழுதுற
நிறைந்த பொருள் மனம் நிறுத்தி, முன் |
|
| வேடம்
துறவா விதியுடைச் சாக்கியன், |
|
| அருட்கரை
காணா, அன்பு எனும் பெருங் கடல் |
15
|
| பல
நாள் பெருகி, ஒரு நாள் உடைந்து, |
|
| கரை
நிலை இன்றிக் கையகன்றிடலும், |
|
| எடுத்துடைக்
கல் மலர் தொடுத்து, அவை சாத்திய, |
|
| பேர்
ஒளி இணையாக் கூடல் மா மணி-- |
|
| குல
மலைக் கன்னி என்று, அருள் குடியிருக்கும் |
20
|
| விதி
நெறி தவறா ஒரு பங்கு உடைமையும், |
|
| பறவை
செல்லாது நெடு முகடு உருவிய |
|
| சேகரத்து
உறங்கும் திருநதித் துறையும், |
|
| நெடும்
பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் |
|
| அருங்
கரை இறந்த ஆகமக்கடலும், |
25
|
| இளங்
கோவினர்கள் இரண்டு அறி பெயரும், |
|
| அன்னமும்
பன்றியும் ஒல்லையின் எடுத்துப் |
|
| பறந்தும்
அகழ்ந்தும், படி இது என்னாது |
|
| அறிவு
அகன்று உயர்ந்த கழல் மணி முடியும் |
|
| உடைமையன்--பொற்கழல்
பேணி |
30
|
| அடையலர்
போல) மருள் மனம் திரிந்தே! |
|