|
7. நற்றாய்
வருந்தல்
|
|
| |
|
| பொடித்து
அரும்பாத சின் முலைக் கொடிமடந்தையள், |
|
| மணி
மிளிர் பெருங் கட்கு இமை காப்பு என்ன, |
|
| விழித்துழி
விழித்தும், அடங்குழி அடங்கியும், |
|
| தன்னை
நின்று அளித்த என்னையும் ஒருவுக; |
|
| பல்
மணிக் கலன்கள் உடற்கு அழகு அளித்தென, |
5
|
| சுற்று
உடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக; |
|
| பிணிமுக-மஞ்ஞை
செருமுகத்து ஏந்திய |
|
| மூ-இரு
திருமுகத்து ஒரு வேலவற்கு, |
|
| வான்
உற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின், |
|
| மனவு
அணி மடந்தை, வெறியாட்டாளன், |
10
|
| வேல்மகன்,
குறத்தி, மா மதி முதியோள்-- |
|
| தொண்டகம்
துவைப்ப, முருகு-இயம் கறங்க-- |
|
| ஒருங்கு
வந்து, இமையா அருங் கடன் முற்றிய |
|
| பின்னர்,
நின்று ஏற்ற கைத்தாயையும் பிழைக்குக; |
|
| கருந்
தலைச் சாரிகை, செவ் வாய்ப் பசுங்கிளி, |
15
|
| தூவி
அம் தோகை, வெள் ஓதிமம், தொடர் உழை, |
|
| இவையுடன்
இன்பமும் ஒருவழி இழக்குக; |
|
| (சேயிதழ்
இலவத்து உடைகாய்ப் பஞ்சி |
|
| புகை
முரிந்து எழுந்தென விண்ணத்து அலமர, |
|
| குழை
பொடி கூவையின் சிறை, சிறை தீந்த |
20
|
| பருந்தும்
ஆந்தையும் பார்ப்புடன் தவழ, |
|
| உடை
கவட்டு ஓமை உலர் சினை இருக்கும் |
|
| வளை
கட் கூகையும் மயங்கி வாய் குழற, |
|
| ஆசையின்
தணியா அழல் பசி தணிக்கக் |
|
| காளிமுன்
காவல் காட்டி வைத்து ஏகும் |
25
|
| குழிகட்
கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப, |
|
| வேம்
உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப, |
|
| நெடுந்
தாட் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப, |
|
| திசை
நின்று எழாது, தழல் முகம் தெறிப்ப, |
|
| சுடலையில்,
சூறை இடை இடை அடிக்கும் |
30
|
| பேர்
அழற் கானினும், நாடும் என் உளத்தினும், |
|
| ஒரு
பால் பசுங்கொடி நிறை பாட்டு அயர, |
|
| பாரிடம்
குனிப்ப, ஆடிய பெருமான்) |
|
| வையகத்து
உருவினர் மலர் ஆவறிவினைப் |
|
| புலன்
நிரை மறைத்த புணர்ப்பு-அதுபோல, |
35
|
| குளிர்
கொண்டு உறையும் தெளிநீர் வாவியை |
|
| வள்ளை,
செங்கமலம், கள் அவிழ் ஆம்பல், |
|
| பாசடை
மறைக்கும் கூடல் பெருமான் |
|
| செந்
தாள் விடுத்து உறை அந்தர்கள் தம்மினும், |
|
| மூவாத்
தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் |
40
|
| இரண்டு
எனக் கவைத்த நல் அரண் தரு தோழியை, |
|
| செரு
விழும் இச்சையர், தமது உடல் பெற்ற |
|
| இன்புகள்
நோக்கா இயல்பு-அது போல, |
|
| மருங்கு
பின் நோக்காது, ஒருங்கு விட்டு அகல, |
|
| பொருந்தியது,
எப்படி, உள்ளம்-- |
45
|
| அருந்
தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே? |
|