|
71.
மாலைப் பொழுதொடு புலம்பல்
|
|
| |
|
| ஆயிரம்
பணாடவி அரவு வாய் அணைத்துக் |
|
| கரு
முகில் நிறத்த கண்ணனின் சிறந்து, |
|
| நிறை
உடல் அடங்கத் திரு விழி நிறைத்துத் |
|
| தேவர்
நின்று இசைக்கும் தேவனின் பெருகி, |
|
| குரு
வளர் மரகதப் பறைத் தழை பரப்பி |
5
|
| மணி
திரை உகைக்கும் கடலினின் கவினி, |
|
| முள்
எயிற்று அரவம் முறித்து உயிர் பருகிப் |
|
| புள்
எழு வானத்து அசனியின் பொலிந்து, |
|
| பூதம்
ஐந்து உடையும் காலக் கடையினும் |
|
| உடல்
தழை நிலைத்த மறம் மிகு மயிலோன்; |
10
|
| புரந்தரன்
புதல்வி, எயினர்தம் பாவை, |
|
| இரு
பால் இலங்க, உலகு பெற நிறைந்த |
|
| அருவிஅம்
குன்றத்து அணி அணி கூடற்கு |
|
| இறையவன்,
பிறையவன், கறை கெழு மிடற்றோன், |
|
| மலர்க்
கழல் வழுத்தும் நம் காதலர், பாசறை |
15
|
| முனைப்பது
நோக்கி, என் முனை அவிழ் அற்றத்து-- |
|
| பெரும்
பகலிடையே, பொதும்பரில் பிரிந்த |
|
| வளை
கட் கூர் உகிர்க் கூக்குரல் மோத்தையை |
|
| கருங்
கட் கொடியினம் கண் அறச் சூழ்ந்து, |
|
| புகை
உடல் புடைத்த விடன் வினைபோல-- |
20
|
| மனம்
கடந்து ஏறா மதில் வளைத்து, எங்கும் |
|
| கரு
நெருப்பு எடுத்த மறன் மருள் மாலை! |
|
| நின்
வரற்கு ஏவர் நல்கினர்? நின் வரல் |
|
| கண்டு
உடல் இடைந்தோர்க் காட்டுதும்; காண்மதி: |
|
| மண்
உடல் பசந்து கறுத்தது; விண்ணமும் |
25
|
| ஆற்றாது
அழன்று, காற்றின் முகம் மயங்கி, |
|
| உடு
எனக் கொப்புள் உடல் நிறை பொடித்தன; |
|
| ஈங்கு
இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும் |
|
| தம்முடன்
மயங்கின; ஒடுங்கின; உறங்கின; |
|
| அடங்கின;
அவிந்தன; அயர்ந்தன; கிடந்தன; |
30
|
| எனப்
பெறின்--மாலை! என் உயிர் உளைப்பதும், |
|
| அவர்
திறம் நிற்பதும், ஒருபுடை கிடக்க; |
|
| உள்ளது
மொழிமோ, நீயே: விண்ணுழை |
|
| வந்தனை
என்னில், வரும் குறி கண்டிலன்; |
|
| மண்ணிடை
எனினே, அவ் வழியான; |
35
|
| கூடி
நின்றனை எனின், குறி தவறாவால்; |
|
| தேம்
படர்ந்தனை எனின், திசை குறிக்குநரால்; |
|
| ஆதலின்,
நின் வரவு எனக்கே |
|
| ஓதல்
வேண்டும் புலன் பெறக் குறித்தே. |
|