|
73.
அயல் அறிவு உரைத்து அவள் அழுக்கம் எய்தல்
|
|
| |
|
| ஆடகச்
சயிலத்து ஓர் உடல் பற்றி, |
|
| கலி
திரைப் பரவையும், கனன்று எழு வடவையும், |
|
| அடியினும்,
முடியினும், அணைந்தன போல, |
|
| பசுந்
தழைத் தோகையும், செஞ் சிறைச் சேவலும், |
|
| தாங்கியும்,
மலர்க்கரம் தங்கியும், நிலைத்த |
5
|
| பேர்
ஒளி மேனியன்; பார் உயிர்க்கு ஓர் உயிர்; |
|
| மாவுடைக்
கூற்றம்; மலர் மயன் தண்டம்; |
|
| குறுமுனி
பெறும் மறை; நெடு மறை பெறா முதல்; |
|
| குஞ்சரத்
தோகையும் குறமகட் பேதையும் |
|
| இருந்தன
இரு புறத்து எந்தை; என் அமுதம்-- |
10
|
| பிறந்தருள்
குன்றம் ஒருங்குறப் பெற்ற |
|
| மாதவக்
கூடல் மதிச் சடைக் காரணன் |
|
| இரு
பதம் தேறா இருள் உளம் ஆம் என, |
|
| இவள்
உளம் கொட்ப, அயல் உளம் களிப்ப-- |
|
| அரும்
பொருட் செல்வி எனும் திருமகட்கு, |
15
|
| மானிட
மகளிர்தாமும், நின்று எதிர்ந்து, |
|
| புல்
இதழ்த் தாமரை இல் அளித்தெனவும்; |
|
| உலகு,
விண், பனிக்கும் ஒரு சயமகட்கு, |
|
| தேவர்தம்
மகளிரும் செருமுகம் நேர்ந்து, |
|
| வீரம்
அங்கு ஈந்து பின் விளிவது மானவும்; |
20
|
| இருள்
உடல் அரக்கியர் கலைமகட் கண்டு, |
|
| தென்
தமிழ், வட கலை, சில கொடுத்தெனவும்; |
|
| நீரர
மகளிர் பாந்தள்அம் கன்னியர்க்கு, |
|
| ஆர்
எரி மணித்திரள் அருளியது எனவும்; |
|
| செம்
மலர்க் குழல் இவள் போய் அறிவுறுத்தக் |
25
|
| கற்றதும்;
கல்லாது உற்ற ஊரனை |
|
| அவள்
தர--இவள் பெறும் அரந்தைஅம் பேறினுக்கு |
|
| ஒன்றிய
உவமம் இன்று: இவண் உளவால், |
|
| மற்று-அவள்
தர, நெடுங் கற்பே |
|
| உற்று
இவள் பெற்றாள் என்பதும் தகுமே. |
30
|