|
76.
முன்பனிக்கு நொந்து உரைத்தல்
|
|
| |
|
| கடல்மகள்,
உள் வைத்து வடவை, மெய் காயவும், |
|
| மலைமகள்
தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும், |
|
| மாசு
அறு திருமகள் மலர் புகுந்து, ஆயிரம் |
|
| புற
இதழ்ப் புதவு அடைத்து, அதன் வெதுப்பு உறைக்கவும், |
|
| சமயமகள்
சீற்றத் தழல் மனம் வைத்துத் |
5
|
| திணி
புகும் வென்றிச் செரு அழல் கூடவும், |
|
| ஐயர்
பயிற்றிய விதி அழல் ஓம்பவும், |
|
| அவ்
அனற்கு அமரர் அனைத்தும் வந்து அணையவும், |
|
| (முன்
இடைக்காடன் பின் எழ நடந்து, |
|
| நோன்புறு
விரதியர் நுகர உள் இருந்து, என் |
10
|
| நெஞ்சகம்
நின்று, நினைவினுள் மறைந்து, |
|
| புரை
அறும் அன்பினர் விழி பெறத் தோற்றி, |
|
| வானவர்
நெடு முடி மணித் தொகை திரட்டிப் |
|
| பதுக்கை
செய் அம்பலத் திருப் பெரும் பதியினும், |
|
| பிறவாப்
பேர் ஊர்ப் பழ நகரிடத்தும், |
15
|
| மகிழ்
நடம் பேய் பெறும் வடவனக் காட்டினும், |
|
| அரு
மறை முடியினும், அடியவர் உளத்தினும், |
|
| குனித்து
அருள் நாயகன்) குல மறை பயந்தோன் |
|
| இருந்
தமிழ்க் கூடல், பெருந் தவர் காண, |
|
| வெள்ளி
அம்பலத்துள் துள்ளிய ஞான்று, |
20
|
| நெருப்பொடு
சுழலவும், விருப்பு எடுத்து அவ் அழல் |
|
| கையினில்
கொள்ளவும், கரி உரி மூடவும், |
|
| ஆக்கிய
பனிப்பகைக் கூற்று இவை நிற்க-- |
|
| அங்கு,
அவர் துயர் பெற ஈன்ற என் ஒருத்தி |
|
| புகல்
விழும் அன்பு தற்கு இன்றி |
25
|
| மகவினைப்
பெறலாம் வரம் வேண்டினளே. |
|