|
8. செலவு நினைந்து உரைத்தல்
|
|
| |
|
| உயிர்
புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும் |
|
| பழவினை
புகுந்த, பாடகம் போல, |
|
| முதிர்
புயல் குளிறும் எழு மலை புக்க |
|
| கட்டுடைச்
சூர் உடல் காமம் கொண்டு |
|
| பற்றி
உட்புகுந்து, பசுங் கடல் கண்டு, |
5
|
| மாவொடும்
கொன்ற மணி நெடுந் திரு வேல் |
|
| சேவல்அம்
கொடியோன் காவல் கொண்டிருந்த |
|
| குன்றம்
உடுத்த கூடல் அம் பதி இறை, |
|
| தொடர்ந்து
உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன் |
|
| (புண்ணியம்
தழைத்த முன் ஓர் நாளில், |
10
|
| இரு
விரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி, |
|
| குழை
உடல் தலை விரி கைத்திரி கறங்க; |
|
| ஒரு
விரல் தெறித்தும், ஐவிரல் குவித்தும், |
|
| பெரு
வாய் ஒரு முகப் படகம் பெருக்க; |
|
| தடா
உடல் உம்பர்த் தலை பெறும் முழவம் |
15
|
| நான்
முகம் தட்டி, நடு முகம் உரப்ப; |
|
| ஒரு
வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த |
|
| சல்லரி
அங்கைத் தலை விரல் தாக்க; |
|
| கயந்தலை
அடி என, கயிறு அமை கைத்திரி, |
|
| இரு
விரல் உயர்த்திச் செரு நிலை, இரட்ட; |
20
|
| இரு
தலை குவிந்த நெட்டுடல்-தண்ணுமை |
|
| ஒரு
முகம் தாழ்த்தி, இரு கடிப்பு ஒலிப்ப; |
|
| திருமலர்
எழுதிய வரை இருபத்தைந்து |
|
| அங்குலி
இரண்டு இரண்டு அணைத்து விளர் நிறீஇ, |
|
| மும்
முகக் கயலுடன் மயிர்க் கயிறு விசித்த |
25
|
| கல்லவடத்
திரள் விரல்-தலை கறங்க; |
|
| மரக்கால்
அன்ன ஒருவாய்க்கோதை |
|
| முகத்தினும்
தட்ட, மூக்கினும் தாக்க; |
|
| நாடு
இரு முனிவர்க்கு ஆடிய பெருமான்) |
|
| திருவடி
வினவாக் கரு உறை மாக்கள் |
30
|
| நெஞ்சினும்
கிடந்து நீண்ட வல் இரவில், |
|
| செல்லவும்
உரியம், தோழி, நில்லாது-- |
|
| எம்
எதிர்வு இன்றி, இருந்து எதிர்ப்பட்டு, |
|
| மறைவழி
ஒழுகா மன்னவன் வாழும் |
|
| பழி
நாட்டு ஆர்ந்த பாவம் போலச் |
35
|
| சேர
மறைத்த கூர் இருள் நடு நாள், |
|
| 'அரிதின்
போந்தனிர்' என்று, ஓர் |
|
| பெரிது
இன் வாய்மை வெற்பனின் பெறினே! |
|