|
80.
கலவி கருதிப் புலத்தல்
|
|
| |
|
| நிலை
நீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி, |
|
| வான்
தவழ் உடற் கறை மதி எனச் சுருங்கி, |
|
| புல்லர்
வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும் |
|
| சீறுணவு
இன்பத் திருந்தா வாழக்கை, |
|
| கான்றிடு
சொன்றியின் கண்டு, அருவருத்து, |
5
|
| புலன்
அறத் துடைத்த நலன் உறு கேள்வியர், |
|
| ஆரா
இன்பப் பேர் அமுது அருந்தி, |
|
| துறவு
எனும் திருவுடன் உறவு செய் வாழ்க்கையர், |
|
| வாயினும்,
கண்ணினும், மனத்தினும், அகலாப் |
|
| பேர்
ஒளி நாயகன்; கார் ஒளி மிடற்றோன்; |
10
|
| மண்
திரு வேட்டுப் பஞ்சவற் பொருத |
|
| கிள்ளியும்,
கிளையும், கிளர் படை நான்கும், |
|
| திண்மையும்,
செருக்கும், தேற்றமும், பொன்றிட, |
|
| எரிவாய்
உரகர் இருள் நாட்டு உருவக் |
|
| கொலைக்
கொண்டாழி குறியுடன் படைத்து, |
15
|
| மறியப்
புதைத்த மறம் கெழு பெருமான்; |
|
| நீர்
மாக் கொன்ற சேயோன் குன்றமும், |
|
| கல்வியும்,
திருவும், காலமும், கொடியும், |
|
| மாடமும்,
ஓங்கிய மணி நகர்க் கூடல் |
|
| ஆலவாயினில்
அருளுடன் நிறைந்த |
20
|
| பவளச்
சடையோன்--பதம் தலை சுமந்த |
|
| நல்
இயல் ஊர! நின் புல்லம் உள் மங்கையர் |
|
| ஓவிய
இல்லம் எம் உறையுள் ஆக, |
|
| கேளாச்
சிறு சொல் கிளக்கம் கலதியர் |
|
| இவ்வுழி
ஆயத்தினர்களும் ஆக, |
25
|
| மௌவல்
இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் |
|
| முன்றிலும்
எம்முடை முன்றில் ஆக, |
|
| மலர்ச்
சுமைச் சேக்கை மது மலர் மறுத்த இத் |
|
| திருமனம்
கொள்ளாச் சேக்கை-அது ஆக, |
|
| நின்
உளம் கண்டு, நிகழ் உணவு உன்னி, |
30
|
| நாணா
நவப் பொய் பேணி உள் புணர்த்தி, |
|
| யாழொடு
முகமன் பாணனும் நீயும், |
|
| திருப்
பெறும் அயலவர் காண |
|
| வரப்
பெறு மாதவம் பெரிது உடையேமே. |
|