|
82.
நெஞ்சொடு வருந்தல்
|
|
| |
|
| வடமொழி
மதித்த இசை நூல் வழக்குடன் |
|
| அடுத்தன
எண்-நான்கு அங்குலியகத்தினும், |
|
| நாற்பதிற்று
இரட்டி நால் அங்குலியினும், |
|
| குறுமையும்,
நெடுமையும், கோடல் பெற்று; ஐதாய், |
|
| ஆயிரம்
தந்திரி நிறை பொது விசித்து; |
5
|
| கோடி
மூன்றில் குறித்து; மணி குயிற்றி; |
|
| இரு
நிலம் கிடத்தி; மனம், கரம், கதுவ; |
|
| ஆயிரத்து
எட்டில் அமைத்தன பிறப்பு, |
|
| பிரவிப்
பேதத் துறையது போல, |
|
| ஆரியப்
பதம் கொள் நாரதப் பேரியாழ் |
10
|
| நன்னர்
கொள் அன்பால் நனிமிகப் புலம்ப-- |
|
| முந்
நான்கு அங்குலி முழு உடல் சுற்றும், |
|
| ஐம்பதிற்று
இரட்டி ஆறுடன் கழித்த |
|
| அங்குலி
நெடுமையும் அமைத்து, உள் தூர்ந்தே, |
|
| ஒன்பது
தந்திரி உறுத்தி, நிலை நீக்கி, |
15
|
| அறுவாய்க்கு
ஆயிரண்டு அணைத்து வரை கட்டி, |
|
| தோள்
கால் வதிந்து, தொழில்படத் தோன்றும் |
|
| தும்புருக்
கருவியும் துள்ளி நின்று இசைப்ப-- |
|
| எழு
என உடம்பு பெற்று, எண்பது அங்குலியின், |
|
| தந்திரி
நூறு தழங்கு மதி முகத்த |
20
|
| கீசகப்
பேரியாழ் கிளையுடன் முரல-- |
|
| நிறைமதி
வட்டத்து முயல் உரி விசித்து, |
|
| நாப்பண்
ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து, |
|
| அந்
நரம்பு இருபத்தாறு அங்குலி பெற |
|
| இடக்
கரம் துவக்கி, இடக்கீழ் அமைத்து, |
25
|
| புற
விரல் மூன்றின், நுனிவிரலகத்தும், |
|
| அறுபத்திரண்டு
இசை அனைத்து உயிர் வணக்கும் |
|
| மருத்துவப்
பெயர் பெறும் வானக் கருவி, |
|
| தூங்கலும்,
துள்ளலும், துவக்கி நின்று இசைப்ப-- |
|
| நான்முகன்
முதலா மூவரும் போற்ற, |
30
|
| முனிவர்
அஞ்சலியுடன் முகமன் இயம்ப, |
|
| தேவர்கள்
அனைவரும் திசைதிசை இறைஞ்ச, |
|
| இன்பப்
பசுங்கொடி இடப்பால் படர, |
|
| வெள்ளிஅம்
குன்றம் விளங்க வீற்றிருந்த-- |
|
| முன்னவன்
கூடல் முறைவணங்கார் என, |
35
|
| அரவப்
பசுந் தலை, அரும்பு அவிழ் கணைக் கால், |
|
| நெய்தற்
பாசடை நெடுங் காட்டு ஒளிக்கும் |
|
| கண்
எனக் குறித்த கருங் கயல் கணத்தை, |
|
| வெள்
உடல், கூர்வாய், செந் தாட் குருகினம், |
|
| அரவு
எயிறு அணைத்த முள் இலை முடக் கைதைகள் |
40
|
| கான்று
அலர் கடி மலர் கரந்து உறைந்து, உண்ணும் |
|
| கருங்
கழி கிடந்த கானல்அம் கரைவாய், |
|
| மெய்
படு கடுஞ் சூள் மின் எனத் துறந்தவர் |
|
| சுவல்
உளைக் கவனப் புள் இயல் கலி மான் |
|
| நோக்கம்
மிறைத்த பரிதி கொள் நெடுந் தேர்ப் |
45
|
| பின்னொடும்
சென்ற என் பெரும் பிழை நெஞ்சம், |
|
| சென்றுழிச்சென்றுழிச்
சேறலும் உளவோ? |
|
| அவ்
வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ? |
|
| இடை
வழி நீங்கி என் எதிர் உறுங்கொல்லோ? |
|
| அன்றியும்,
நெடு நாள் அமைந்து உடன் வருமோ? |
50
|
| யாது
என நிலைக்குவன்மாதோ-- |
|
| பேதை
கொள்ளாது ஒழி மனம், கடுத்தே? |
|