|
85.
இரங்கல்
|
|
| |
|
| பழுது
அறு தெய்வம் காட்டிப் பண்டையின் |
|
| உழுவலின்
நலத்தால் ஓர் உயிர் என்றும், |
|
| கடஞ்
சூள் தந்தும், கைபுனை புனைந்தும் |
|
| பூழிஅம்
போனகம் பொதுவுடன் உண்டும், |
|
| குழமகற்
குறித்தும், சில மொழி கொடுத்தும், |
5
|
| கையுறை
சுமந்தும், கடித் தழை தாங்கியும், |
|
| உயிரினில்
தள்ளா இரங்கியும், உணங்கியும், |
|
| பனையும்,
கிழியும் படைக்குவன் என்றும், |
|
| இறடிஅம்
சேவற்கு எறி கவண் கூட்டியும், |
|
| புனமும்
எம் உயிரும் படர் கரி தடிந்தும், |
10
|
| அழுங்குறு
புனல் எடுத்து அகிற் புகை ஊட்டியும், |
|
| ஒளி
மணி ஊசல் பரிய விட்டு யாத்தும், |
|
| இரவினில்
தங்க எளிவரல் இரந்தும், |
|
| இருவிஅம்
புனத்திடை எறி உயிர்ப்பு எறிந்தும், |
|
| தெரித்து
அலர் கொய்தும், பொழில் குறி வினவியும், |
15
|
| உடலொடும்
பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி, |
|
| செறிஇருட்
குழம்பகம் சென்று, பளிங்கு எடுத்த |
|
| இற்
பொழில் கிடைக்கும் அளவும் நின்று அலைந்தும், |
|
| பல
நாள் பல் நெறி அழுங்கினர்: இன்று, |
|
| (முகன்
ஐந்து மணத்த முழவம் துவைக்க |
20
|
| ஒரு
கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து, |
|
| மூஉடல்
அணைத்த மும் முகத்து ஓர் முகத்து |
|
| எண்
கடிப்பு விசித்த கல்லலகு எறிய, |
|
| இருட்
குறள் ஊன்றி, எம் அருட்களி ஆற்றி, |
|
| உருள்
வாய்க் கொக்கரை உம்பர் நாட்டு ஒலிக்க, |
25
|
| கரம்,
கால், காட்டி, தலையம் இயக்கி, |
|
| இதழ்
அவிழ் தாமரை எனும் தகுணிச்சம் |
|
| துவைப்ப,
நீள் கரத்துக் கவைகள் தோற்றி, |
|
| கரிக்
கால் அன்ன மொந்தை கலித்து இரங்க, |
|
| துடி
எறிந்து இசைப்ப, துகளம் பரப்பி, |
30
|
| வள்ளம்
பிணைத்த செங் கரடிகை மலக்க, |
|
| எரியகல்
ஏந்தி, வெம் புயங்கம் மிசை ஆக்கி, |
|
| எரி
தளிர்த்தன்ன வேணியில் குழவிப் |
|
| பசும்
பிறை அமுதொடு நிரம்பியதென்ன |
|
| மதுக்
குளிர் மத்தமும் மிலைத்து, ஒரு மறு பிறை |
35
|
| மார்பமும்
இருத்தியதென்னக் கூன் புறத்து |
|
| ஏனக்கோடு
வெண் பொடிப் புறத்து ஒளிர, |
|
| பொலன்
மிளிர் மன்றப் பொதுவகம் நாடித் |
|
| தனிக்கொடி
காண, எவ்விடத்து உயிர் தழைப்ப, |
|
| ஆடிய
பெருமான் அமர்ந்து நிறை கூடல் |
40
|
| கனவிலும்
வினவாதவரினும் நீங்கி, |
|
| சூளும்
வாய்மையும் தோற்றி,) |
|
| நீளவும்
பொய்த்தற்கு அவர் மனம் கரியே! |
|