|
88.
உடன்பட உரைத்தல்
|
|
| |
|
| வேலிஅம்
குறுஞ் சூல் விளைகாய்ப் பஞ்சினம் |
|
| பெரு
வெள்ளிடையில் சிறுகால் பட்டென, |
|
| நிறை
நாண் வேலி நீங்கி, தமியே |
|
| ஓர்
உழி நில்லாது, அலமரல் கொள்ளும் என் |
|
| அருந்
துணை நெஞ்சிற்கு உறும் பயன் கேண்மதி: |
5
|
| மண்ணுளர்
வணங்கும் தன்னுடைத் தகைமையும், |
|
| இருள்
அறு புலனும், மெய்ப்பொருள் அறி கல்வியும், |
|
| அமரர்
பெற்று உண்ணும் அமுது உருக் கொண்டு |
|
| குறுஞ்
சொல் குதட்டிய மழலை மென் கிளவியில் |
|
| விதலை
உள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும், |
10
|
| நின்
நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும் |
|
| துவருறத்
தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன், |
|
| 'பொம்மல்அம்
கதிர் முலை புணர்வுறும்கொல்?' எனச் |
|
| சென்றுசென்று
இரங்கலை; அன்றியும், தவிர்மோ-- |
|
| (நெட்டுகிர்க்
கருங் கால் தோல்முலைப் பெரும் பேய் |
15
|
| அமர்
பெற்று ஒன்னலர் அறிவுறப் படர, |
|
| பேழ்வாய்
இடாகினி கால் தொழுது ஏத்திக் |
|
| கையடை
கொடுத்த வெள் நிண வாய்க் குழவி, |
|
| ஈமப்
பெரு விளக்கு எடுப்ப, மற்று-அதன் |
|
| சுடு
பொடிக் காப்பு உடல் துளங்க, சுரிகுரல் |
20
|
| ஆந்தையும்
கூகையும் அணி ஓலுறுத்த, |
|
| ஓரி
பாட்டு எடுப்ப, உவணமும் கொடியும் |
|
| செஞ்
செவிச் சேவல் கவர் வாய்க் கழுகும் |
|
| இட்ட
செய்பந்தர் இடைஇடை கால் என, |
|
| பட்டு
உலர் கள்ளிஅம்பால், துயில் கொள்ளும் |
25
|
| சுள்ளிஅம்
கானிடை, சுரர் தொழுது ஏத்த-- |
|
| மரகதத்
துழாயும், அந் நிறக் கிளியும், |
|
| தோகையும்,
சூலமும்; தோளில், முன்கையில், |
|
| மருங்கில்,
கரத்தில், வாடாது இருத்தி, |
|
| போர்
வலி அவுணர் புகப் பொருது உடற்றிய |
30
|
| முக்
கண், பிறை எயிற்று, எண் தோட் செல்வி, |
|
| கண்டு
உளம் களிப்ப--கனைகழல் தாமரை |
|
| வானக-வாவியூடு
உற மலர, |
|
| ஒரு
தாள் எழு புவி உருவ, திண் தோள் |
|
| பத்துத்
திசையுள் எட்டு அவை உடைப்ப-- |
35
|
| ஒரு
நடம் குலவிய திருவடி உரவோன்) |
|
| கூடல்அம்
பதியகம் போற்றி |
|
| நீட
நின்று எண்ணார் உளம் என நீயே. |
|