|
92.
பாங்கி அன்னத்தோடு அழுங்கல்
|
|
| |
|
| வெறி
மறி மடைக்குரல் தோல் காய்த்தென்ன |
|
| இருக்கினும்
இறக்கினும் உதவாத் தேவர்தம் |
|
| பொய்
வழிக் கதியகம் மெய் எனப் புகாத |
|
| விழியுடைத்
தொண்டர்-குழு முடி தேய்ப்ப, |
|
| தளிர்த்துச்
சிவந்த தண்டைஅம் துணைத் தாள் |
5
|
| சேயோன்
பரங்குன்று, இழை எனச் செறித்து, |
|
| தமிழ்க்கலை
மாலை சூடி, தாவாப் |
|
| புகழ்க்கலை
உடுத்து, புண்ணியக் கணவர் |
|
| பல்
நெறிவளனின் பூட்சியின் புல்லும் |
|
| தொல்
நிலைக் கூடல், துடிக் கரத்து ஒருவனை, |
10
|
| அன்பு
உளத்து அடக்கி, இன்பம் உண்ணார் என, |
|
| சேவல்
மண்டலித்துச் சினை அடைகிடக்கும் |
|
| கைதை
வெண் குருகு எழ மொய்திரை உகளும் |
|
| உளைகடற்
சேர்ப்பர், அளி விடத் தணப்ப, |
|
| நீலமும்,
கருங் கொடி அடம்பும், சங்கமும்; |
15
|
| கண்ணிற்கு,
இடையில், களத்தில், கழிதந்து |
|
| அலர்ந்தும்,
உலர்ந்தும், உடைந்தும், அனுங்கலின், |
|
| வட்குடை
மையல் அகற்றி, இன்பு ஒரு கால் |
|
| கூறவும்
பெறுமே! ஆறு-அது நிற்க-- |
|
| இவள்
நடைபெற்றும், இவட் பயின்று இரங்கியும், |
20
|
| ஓர்உழி
வளர்ந்த நீர இவ் அன்னம் |
|
| அன்று
என, தடையாக் கேண்மை |
|
| குன்றும்,
அச் சூளினர் தம்மினும் கொடிதே! |
|