|
93.
இரவு இடை விலக்கல்
|
|
| |
|
| முதுக்
குறிப் பெண்டிர் வரத்து இயல் குறிப்ப, |
|
| வழி
முதல் தெய்வதம் வரைந்து, மற்று-அதற்குப் |
|
| பருக்காடு
உறுத்திப் பலி முதல் பராவ, |
|
| கிள்ளை
அவ் அயலினர் நா உடன்று ஏத்தப் |
|
| பக்கம்
சூழுநர்: குரங்கம், மண் படப் |
5
|
| பெற்று
உயிர்த்து அயரும் பொற்றொடி மடந்தைதன் |
|
| குரு
மணி ஓவியத் திரு நகர்ப் புறத்தும், |
|
| கரியுடன்
உண்ணார் பழிஉளம் ஒத்த |
|
| இருளுடைப்
பெரு முகில் வழி தெரிந்து ஏகன்மின்-- |
|
| (அரிமான்
உருத்த நூற்றுவர் மதித்த |
10
|
| புடை
மனச் சகுனி புள்ளிஅம் கவற்றில், |
|
| அத்
தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு, |
|
| ஒலிவாய்
ஓதிமம் எரிமலர்த் தவிசு இருந்து, |
|
| ஊடு
உகள் சிரலைப் பச்சிற அருந்தும் |
|
| பழனக்
குருநாடு அணி பதி தோற்று, |
15
|
| முன்னுறும்
உழுவலின் பன்னிரு வருடம், |
|
| கண்டீரவத்தொடு
கறையடி வளரும் |
|
| குளிர்
நிழல் அடவி இறைகொண்டு அகன்றபின், |
|
| அனைத்துள
வஞ்சமும் அழித்து, நிரை மீட்சி |
|
| முடித்து,
தமது முடியாப் பதி புக, |
20
|
| 'ஊழ்
முறையே எமக்கு உள மண் கருதிச் |
|
| சேறி'
என்று இசைப்ப, செல் பணித் தூதினர்க்கு |
|
| ஒரு
கால் அளித்த திரு மா மிடற்றோன்) |
|
| பாடல்
சான்ற தெய்வக் |
|
| கூடல்
கூடார் குணம் குறித்து எனவே. |
25
|