|
99.
ஆயத்து உய்த்தல்
|
|
| |
|
| வடவனத்து
ஒரு நாள் மாறுபட்டு எதிர்ந்து |
|
| வழி
நடம் தனது மரக்கால் அன்றி, |
|
| முதல்
தொழில் பதுமன் முன்னாய், அவ் உழி |
|
| மான்தலைக்
கரத்தினில் கூடை வயக்கி, |
|
| தூக்கல்
வளையுடன் தொடர்பதம் எறிந்து, |
5
|
| மற்று
அதன் தாள் அம்புத்திரி ஆக்கி, |
|
| நிமிர்த்து
எறி காலில் கடைக்கண் கிடத்தி, |
|
| பாணியில்
சிரம் பதித்து, ஒரு நடை பதித்து, |
|
| கொடுகொட்டிக்குக்
குறி அடுத்து எடுக்கும் |
|
| புங்கம்,
வாரம், புடைநிலை பொறுத்து, |
10
|
| சச்சபுடத்தில்,
தனி எழு மாத்திரை, |
|
| ஒன்றை
விட்டு ஒரு சீர் இரண்டுற உறுத்தி, |
|
| எடுத்துத்
துள்ளிய இனமுத்திரைக்கு, |
|
| மங்கலப்பாணி
மாத்திரை நான்குடன் |
|
| சென்று
எறிந்து ஒடுங்கும் துருமிடை திருத்தி, |
15
|
| ஞெள்ளலில்
குனித்த இரு மாத்திரைக்குப் |
|
| பட்டடை
எடுக்கப் புலுதம் பரப்பி, |
|
| புறக்
கால் மடித்து, குறித்து எறி நிலையம் |
|
| பதினான்கு
அமைத்து, விடு மாத்திரைக்கு |
|
| வன்மமும்
பிதாவும் பாணியில் வகுத்து, |
20
|
| வட்டம்
கொடுக்கும் இந்திரை பணிக்கு |
|
| மாத்திரை
ஆறுடன் கும்பம் பதித்து, |
|
| வலவை
இடாகினி மண் இருந்து எடுத்த |
|
| காலுடன்
சுழல ஆடிய காளி |
|
| நாணி
நின்று ஒடுங்க, தானும் ஓர் நாடகம், |
25
|
| பாண்டரங்கத்து
ஒரு பாடு பெற்று அமைந்த |
|
| மோகப்
புயங்க முறைத் துறை தூக்கி, |
|
| அதற்குச்
சாரணி அருட்கரம் ஒன்றில் |
|
| பாணி
இரண்டும் தாளம் ஆக்கி, |
|
| ஒரு
தாள் மிதித்து, விண் உற விட்ட |
30
|
| மறு
தாள் மலரில் மலர்க்கரம் துடக்கி, |
|
| பார்ப்பதிப்
பாணியைத் துடி மணி எடுப்ப, |
|
| சுருதியைத்
தண்டி வலி கொண்டு அமைப்ப, |
|
| முதல்
ஏழ்-அதனை ஒன்றினுக்கு ஏழ் என |
|
| வீணை
பதித்துத் தானம் தெரிக்க; |
35
|
| முன்
துடி மணியில் ஒற்றிய பாணியை |
|
| நாதம்
கூட்டி மாத்திரை அறுத்து, |
|
| மாங்கனி
இரண்டில் ஆம் கனி ஒன்றால் |
|
| முன்
ஒரு நாளில் முழுக் கதி அடைந்த |
|
| அம்மைப்
பெயர் பெறும் அருட் பேய் பிடிப்ப; |
40
|
| பூதமும்,
கூளியும், பேயும், குனிப்ப; |
|
| அமரர்
கண் களிப்ப--ஆடிய பெருமான் |
|
| மதுரைஅம்
பதி எனும் ஒரு கொடிமடந்தை |
|
| சீறிதழ்ச்
சாதிப் பெரு மணம் போல, |
|
| நின்
உளம் நிறைந்த நெடுங் கற்பு-அதனால் |
45
|
| வினை
உடல் புணர வரும் உயிர் பற்றிப் |
|
| புண்ணியம்
தொடரும் புணர்ச்சி போல, |
|
| காலம்
உற்று ஓங்கும் நீள்முகில் கூடி |
|
| மணி
தரு தெருவில் கொடி நெடுந் தேரும், |
|
| நாற்
குறிப் புலவர் கூட்டு எழு நனி புகழ் |
50
|
| மருந்து
அயில் வாழ்க்கையர் மணி நகர் உருவின |
|
| உருள்
எழு பூழியும், அவ் உருள் பூண்ட |
|
| கலின
மான் துகளும் கதிர் மறை நிழலின் |
|
| நின்று,
முன் இட்ட நிறை அணி பொறுத்து, |
|
| பெருங்
குலைக் கயத்துக் கருந் தாட் கழுநீர் |
55
|
| நிறைவினுள்
பூத்த தாமரை ஒன்று என, |
|
| நின்
உயிர் ஆய நாப்பண் |
|
| மன்னுக,
வேந்தன் வரவினுக்கு எழுந்தே. |
|