| தொடக்கம் |
31-40
|
|
|
|
|
|
31. நெஞ்சோடு நோதல்
|
|
|
|
|
| பொருள்
செயல் அருத்தியின், எண் வழி தடைந்து, |
|
| நால்
திசை நடக்கும், அணங்கின் அவயவத்து, |
|
| அலை
தரு தட்டைக் கரும் புறம், மலை, மடல், |
|
| கடல்
திரை உகளும் குறுங் கயல் மானும் |
|
| கடுங்
கான் தள்ளி, தடைதரு நெஞ்சம்! |
5
|
| (கயிலைத்
தென்பால் கானகம், தனித்த |
|
| தேவர்
நெஞ்சு உடைக்கும், தாமரை யோகின் |
|
| மணக்
கோல் துரந்த குணக்கோ மதனை, |
|
| திருக்
குளம் முளைத்த கண் தாமரை கொடு |
|
| தென்
கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல் |
10
|
| திரு
மா மதுரை எனும்) திருப் பொற்றொடி, |
|
| என்
உயிர் அடைத்த பொன் முலைச் செப்பின் |
|
| மாளா
இன்பம் கருதியோ? அன்றி, |
|
| புறன்
பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி! |
|
| வளர்
முலை இன்பு எனின், மறித்து நோக்குமதி: |
15
|
| பெரும்-பொருள்
இன்பு எனின், பெரிது தடை இன்றே: |
|
| யாதினைக்
கருதியது? ஒன்றை |
|
| ஓதல்
வேண்டும்; வாழிய பெரிதே! |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 32.
வேழம் வினாதல் |
|
| |
|
| தன்
உடல் அன்றிப் பிறிது உண் கனை இருள் |
|
| பகல்
வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல, |
|
| பெரு
நிலவு கான்ற நீறு கெழு பரப்பில்-- |
|
| அண்ட
நாடவர்க்கு ஆர் உயிர் கொடுத்த |
|
| கண்டக்
கறையோன், கண்தரு நுதலோன், |
5
|
| முன்
ஒரு நாளில் நால் படை உடன்று |
|
| செழியன்
அடைத்த சென்னி பாட |
|
| எள்
அருங் கருணையின், நள் இருள் நடு நாள், |
|
| அவன்
எனத் தோன்றி அருஞ் சிறை விடுத்த |
|
| முன்னவன்
கூடல் மூதூர் அன்ன-- |
10
|
| வெண்
நகைச் செவ் வாய்க் கருங் குழல் மகளிர்! |
|
| செம்மணி
கிடந்த நும் பசும் புனத்து உழையால், |
|
| வாய்
சொரி மழைமதத் தழைசெவிப் புழைக் கைக் |
|
| குழிகண்
பரூஉத் தாள் கூர்ங் கோட்டு ஒருத்தல், |
|
| சினை
தழை விளைத்த பழுமரம் என்ன, |
15
|
| அறுகால்
கணமும், பறவையும், கணையும், |
|
| மேகமும்,
பிடியும், தொடர |
|
| ஏகியது
உண்டேல், கூறுவிர் புரிந்தே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 33.
உலகின்மேல் வைத்து உரைத்தல் |
|
| |
|
| இருளொடு
தாரகை இரண்டினை மயக்கி, |
|
| குழல்
என, மலர் என, மயல்வரச் சுமந்து; |
|
| வில்லினைக்
குனித்து, கணையினை வாங்கி, |
|
| புருவம்,
கண் என, உயிர் விடப் பயிற்றி; |
|
| மலையினைத்
தாங்கி, அமுதினைக் கடைந்து, |
5
|
| முலை என,
சொல் என, அவா வர வைத்து; |
|
| மெய்யினைப்
பரப்பி, பொய்யினைக் காட்டி, |
|
| அல்குல்,
இடை என, நெஞ்சு உழலக் கொடுத்து; |
|
| முண்டகம்
மலர்த்தி, மாந் தளிர் மூடி, |
|
| அடி என,
உடல் என, அலமரல் உறீஇ- |
10
|
| (மூரி
வீழ்ந்த நெறிச் சடை முனிவர், |
|
| சருக்கம்
காட்டும் அரு மறை சொல்லி, |
|
| உள்ளம்
கறுத்து, கண் சிவந்து, இட்ட |
|
| மந்திரத்து,
அழல் குழி தொடு வயிறு வருந்தி, |
|
| முன்பின்
ஈன்ற, பேழ்வாய்ப் புலியினை, |
15
|
| கைதை
முள் செறித்த கூர்எயிற்று அரவினை, |
|
| கார்
உடல் பெற்ற தீ விழிக் குறளினை-- |
|
| உரி செய்து
உடுத்து, செங்கரம் தரித்து, |
|
| செம்மலர்
பழித்த தாட் கீழ்க் கிடத்தி, |
|
| திருநடம்
புரிந்த தெய்வ நாயகன், |
20
|
| ஒரு நாள்,
மூன்று புரம் தீக் கொளுவ, |
|
| பொன்மலை
பிடுங்கி, கார்முகம் என்ன |
|
| வளைத்த
ஞான்று, நெடு விண் தடையக் |
|
| கால்
கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து, |
|
| நெருக்கு
பொழில் கூடல் அன்ன) செம் மகளிர் |
25
|
| கண் எனும்
தெய்வக் காட்சியுள் பட்டோர், |
|
| வெண்பொடி,
எருக்கம், என்பு, பனை, கிழியினை, |
|
| பூசி,
அணிந்து, பூண்டு, பரி கடவி, |
|
| கரத்தது
ஆக்கி, அந் நோ |
|
| அருத்தி
மீட்பர்--நிலை வல்லோரே. |
30
|
|
|
உரை
|
| |
|
|
|
|
|
34. அல்லகுறி
அறிவித்தல்
|
|
| |
|
| வற்றிய
நரம்பு, நெடுங் குரல், பேழ்வாய், |
|
| குழிவிழி,
பிறழ்பல், தெற்றற் கருங் கால், |
|
| தாளிப்
போந்தின் தரு மயிர்ப் பெருந் தலை, |
|
| விண்
புடைத்து அப்புறம் விளங்கு உடற் குணங்கினம் |
|
| கானம்
பாடிச் சுற்றி நின்று ஆட, |
5
|
| சுழல்
விழி, சிறு நகை, குடவயிற்று, இரு குழைச் |
|
| சங்கக்
குறுந் தாட் பாரிடம் குனிப்ப; |
|
| தேவர்
கண் பனிப்ப; முனிவர் வாய் குழற; |
|
| கல்லவடத்
திரள், மடி வாய்த் தண்ணுமை, |
|
| மொந்தை,
கல்லலகு, துத்தரி, ஏங்க; |
10
|
| கட்செவி
சுழல; தாழ்சடை நெறிப்ப; |
|
| இதழி
தாது உதிர்ப்ப; பிறை அமுது உகுக்க; |
|
| வெள்ளி
அம்பலத்துள் துள்ளிய பெருமான் |
|
| கூடல்
மாநகர் அன்ன, பொற்கொடி! |
|
| இரவிக்கு
அணிய வைகறை காறும் |
15
|
| அலமரல்
என்னை கொல்? அறிந்திலம் யாமே!-- |
|
| வெண்
முத்து அரும்பி, பசும் பொன் மலர்ந்து, |
|
| கடைந்த
செம் பவளத் தொத்துடன் காட்டும் |
|
| இரும்பு
கவைத்தன்ன கருங் கோட்டுப் புன்னைச் |
|
| சினை
முகம் ஏந்திய இணர்கொள் வாய்க் குடம்பையின், |
20
|
| எக்கர்ப்
புள்ளினம் வெண்மை இடம் மறைக்கும் |
|
| சிறை
விரி தூவிச் செங் கால் அன்னம், |
|
| குறும்
பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ, |
|
| சேவலும்
இனமும் சூழும் |
|
| காவில்
மாறித் துயில் அழுங்குதற்கே. |
25
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 35.
நலம் புனைந்து உரைத்தல் |
|
|
|
|
| அருள்
தரும் கேள்வி அமையத் தேக்க, |
|
| பற்பல
ஆசான் பாங்கு செல்பவர் போல், |
|
| மூன்று
வகை அடுத்த தேன் தரு கொழு மலர் |
|
| கொழுதிப்
பாடும் குணச் சுரும்பினங்காள்! |
|
| உளத்து
வேறு அடக்கி, முகமன் கூறாது, |
5
|
| வேட்கையின்
நீயிர் வீழ் நாள்-பூவினத்துள்-- |
|
| கார்
உடல் பிறை எயிற்று அரக்கனைக் கொன்று |
|
| வச்சிரத்
தடக்கை வரைப் பகை சுமந்த |
|
| பழ
உடல் காட்டும் தீராப் பெரும் பழி, |
|
| பனி
மலை பயந்த மாதுடன், தீர்த்தருள் |
10
|
| பெம்மான்
வாழும் பெரு நகர்க் கூடல் |
|
| ஒப்புறு
பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்-- |
|
| கொலையினர்
உள்ளமும் குறைகொள இருண்டு, |
|
| நானம்
நீவி, நாள்மலர் மிலைந்து, |
|
| கூடி
உண்ணும் குணத்தினர் கிளைபோல் |
15
|
| நீடிச்
செறிந்து, நெய்த்து உடல் குளிர்ந்த |
|
| கருங்
குழற் பெரு மணம் போல |
|
| ஒருங்கும்
உண்டோ? பேசுவிர் எமக்கே! |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 36.
நாண் இழந்து வருந்தல் |
|
| |
|
| மை
குழைத்தன்ன தொள்ளிஅம் செறுவில், |
|
| கூர்வாய்ப்
பறை தபு பெருங் கிழ நாரை, |
|
| வஞ்சனை
தூங்கி, ஆரல் உண்ணும் |
|
| நீங்காப்
பழனப் பெரு நகர்க் கூடல், |
|
| கரம்
மான் தரித்த பெருமான் இறைவன் |
5
|
| பொன்
பழித்து எடுத்த இன்புறு திருவடி |
|
| உளம்
விழுங்காத களவினர் போல, என் |
|
| உயிரொடும்
வளர்ந்த பெரு நாண்-தறியினை, |
|
| வெற்பன்
காதற்கால் உலை வேலையின்-- |
|
| வலி
உடைக் கற்பின் நெடு வளி சுழற்றிக் |
10
|
| கட்புலன்
காணாது, காட்டை கெட உந்தலின்; |
|
| என்போல்,
இந் நிலை, ஆறுவரப் படைக்கும் |
|
| பேறு,
ஆங்கு ஒழிக: பெரு நாண் கற்பினர் |
|
| என்
பேறு உடையர் ஆயின், |
|
| கற்பில்
தோன்றாக் கடன் ஆகுகவே. |
15
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 37.
தோழி இயற்பழித்தல் |
|
| |
|
| வடமீன்
கற்பின் எம் பீடு கெழு மடந்தை, |
|
| பெருங்
கடல் முகந்த வயிறு நிறை நெடுங் கார் |
|
| விண்
திரிந்து முழங்கி வீழாதாகக் |
|
| கருவொடு
வாடும் பைங் கூழ்போல, |
|
| கற்பு
நாண் மூடிப் பழங்கண் கொள்ள-- |
5
|
| உயர்மரம்
முளைத்த ஊரி போல, |
|
| ஓர்
உடல் செய்து மறு மனம் காட்டும் |
|
| மாணிழை-மகளிர்வயின்
வைகுதலால், |
|
| (கரு
முகிற் கனி நிறத் தழற்கண் பிறை எயிற்று |
|
| அரி
தரு குட்டி ஆய பன்னிரண்டினை, |
10
|
| செங்கோல்
முளை இட்டு, அருள்நீர் தேக்கி, |
|
| கொலை
களவு என்னும் படர் களை கட்டு, |
|
| தீப்
படர் ஆணை வேலி கோலி, |
|
| தருமப்
பெரும் பயிர் உலகு பெற விளைக்கும் |
|
| நால்
படை வன்னியர் ஆக்கிய பெருமான்-- |
15
|
| முள்
உடைப் பேழ்வாய்ச் செங் கண் வராலினம் |
|
| வளை
வாய்த் தூண்டிற் கருங் கயிறு பரிந்து, |
|
| குவளைப்
பாசடை முண்டகம், உழக்கி, |
|
| நெடுங்
கால் பாய்ந்து, படுத்த ஒண் தொழில் |
|
| சுருங்கை
வழி அடைக்கும் பெருங் கழிப் பழனக் |
20
|
| கூடற்கு
இறைவன்--இரு தாள் விடுத்த |
|
| பொய்யினர்
செய்யும் புல்லம் போல,) |
|
| பேரா
வாய்மை ஊரன், |
|
| தாரொடு
மயங்கி, பெருமையும் இலனே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 38.
பொழுது கண்டு மயங்கல் |
|
| |
|
| கோடிய
கோலினன் செருமுகம் போல, |
|
| கனைகதிர்
திருகிக் கல் சேர்ந்து முறை புக; |
|
| பதினெண்
கிளவி ஊர் துஞ்சியபோல், |
|
| புட்
குலம் பொய்கைவாய் தாழ்க்கொள்ள; |
|
| வேள்
சரத்து உடைகுநர் கோலம் நோக்கி, |
5
|
| இருள்மகள்
கொண்ட குறுநகை போல, |
|
| முல்லையும்
மௌவலும், முருகு உயிர்த்து, அவிழ; |
|
| தணந்தோர்
உளத்தில் காமத்தீப் புக; |
|
| மணந்தோர்
நெஞ்சத்து அமுத நீர் விட; |
|
| அன்றில்
புற் சேக்கை புக்கு, அலகு பெடை அணைய; |
10
|
| அந்தணர்
அருமறை அருங்கிடை அடங்க; |
|
| முது
கனி, மூலம், முனிக்கணம் மறுப்ப; |
|
| கலவையும்,
பூவும், தோள், முடி, கமழ; |
|
| விரிவலை
நுளையர் நெய்தல் ஏந்தி, |
|
| துத்தம்,
கைக்கிளை, அளவையின் விளைப்ப; |
15
|
| நீரரமகளிர்
செவ் வாய் காட்டிப் |
|
| பசுந்
தாட் சேக் கொள் ஆம்பல் மலர, |
|
| (தோளும்
இசையும், கூறிடும் கலையும், |
|
| அருள்-திரு
எழுத்தும், பொருள்-திரு மறையும், |
|
| விரும்பிய
குணமும், அருந் திரு உருவும், |
20
|
| முதல்
என் கிளவியும், விதமுடன் நிரையே-- |
|
| எட்டும்,
ஏழும், சொற்றன ஆறும், |
|
| ஐந்தும்,
நான்கும், அணிதரு மூன்றும் |
|
| துஞ்சல்
இல் இரண்டும், சொல் அரும் ஒன்றும்-- |
|
| ஆர்
உயிர் வாழ அருள் வர நிறுத்திய, |
25
|
| பேர்
அருட் கூடல் பெரும்பதி நிறைந்த) |
|
| முக்கட்
கடவுள் முதல்வனை வணங்கார் |
|
| தொக்க
தீப் பெரு வினை சூழ்ந்தன போலவும்; |
|
| துறவால்,
அறனால், பெறல் இல் மாந்தர் |
|
| விள்ளா
அறிவும் உள்ளமும் என்னவும்; |
30
|
| செக்கர்த்
தீயொடு புக்க நல் மாலை! |
|
| என்
உயிர் வளைந்த தோற்றம் போல, |
|
| நாற்
படை வேந்தன் பாசறை- |
|
| யோர்க்கும்
உளையோ" மனத் திறன் ஓதுகவே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 39.
ஆடு இடத்து உய்த்தல் |
|
| |
|
| முன்னி
ஆடுக; முன்னி ஆடுக-- |
|
| குமுதமும்,
வள்ளையும், நீலமும், குமிழும், |
|
| தாமரை
ஒன்றில் தடைந்து வளர் செய்த |
|
| முளரி
நிறை செம்மகள்! முன்னி ஆடுக: |
|
| நிற்
பெறு தவத்தினை முற்றிய யானும், |
5
|
| (பல
குறி பெற்று இவ் உலகு, உயிர், அளித்த |
|
| பஞ்சின்
மெல் அடிப் பாவை கூறு ஆகி, |
|
| கருங்குருவிக்குக்
கண்ணருள் கொடுத்த |
|
| வெண்
திரு நீற்றுச் செக்கர் மேனியன்-- |
|
| கிடையில்
தாபதர் தொடை மறை முழக்கும், |
10
|
| பொங்கர்க்
கிடந்த சூற் கார்க் குளிறலும், |
|
| வல்லியில்
பரியும் பகடு விடு குரலும், |
|
| யாணர்க்
கொடிஞ்சி நெடுந் தேர் இசைப்பும், |
|
| ஒன்றி
அழுங்க, நின்ற நிலை பெருகி, |
|
| மாதிரக்
களிற்றினைச் செவிடு படுக்கும் |
15
|
| புண்ணியக்
கூடல் உள் நிறை பெருமான்-- |
|
| திருவடி
சுமந்த அருளினர் போல) |
|
| கருந்
தேன் உடைத்துச் செம்மணி சிதறி, |
|
| பாகற்
கோட்டில் படர்கறி வணக்கி, |
|
| கல்லென்று
இழிந்து, கொல்லையில் பரக்கும் |
20
|
| கறங்கு
இசை அருவிஅம் சாரல் |
|
| புறம்பு
தோன்றி, நின்கண் ஆகுவனே. |
|
|
|
உரை
|
| |
|
|
|
|
| 40.
விரதியரைவினாவல் |
|
| |
|
| நிலவு
பகல் கான்ற புண்ணிய அருட்பொடி |
|
| இரு
வினை துரந்த திருவுடல் மூழ்கி, |
|
| நடு
உடல் வரிந்த கொடிக்காய்ப் பத்தர், |
|
| சுத்தி
அமர் நீறுடன், தோள்வலன் பூண்டு, |
|
| முடங்கு
வீழ் அன்ன வேணி முடி கட்டி, |
5
|
| இரு
மூன்று குற்றம் அடியறக் காய்ந்து, இவ் |
|
| ஆறு
எதிர்ப்பட்ட அருந் தவத் திருவினிர்! |
|
| "தணியாக்
கொடுஞ் சுரம் தரும் தழல் தாவிப் |
|
| பொன்-உடல்
தேவர் ஒக்கலொடு மயங்கி, |
|
| கொண்மூப்
பல் திரைப் புனலுடன் தாழ்த்தி, |
10
|
| பொதுளிய
தருவினுள் புகுந்து, இமையாது, |
|
| மருந்து
பகுத்து உண்டு, வல் உயிர் தாங்கும் |
|
| வட்டை
வந்தனை!" என, வழங்கு மொழி நிற்க: |
|
| "தாய்
கால் தாழ்ந்தனள்; ஆயம் வினவினள்; |
|
| பாங்கியைப்
புல்லினள்; அயலும் சொற்றனள்; |
15
|
| மக்கட்
பறவை பரிந்து உளம் மாழ்கினள்; |
|
| பாடலப்
புதுத் தார்க் காளையின் ஒன்றால் |
|
| தள்ளா
விதியின் செல்குநள்" என்று-- |
|
| தழல்விழிப்
பேழ்வாய்த் தரக்கின் துளி முலை, |
|
| பைங்
கண் புல்வாய், பால் உணக் கண்ட |
20
|
| அருள்
நிறை பெருமான், இருள் நிறை மிடற்றோன், |
|
| மங்குல்
நிரை பூத்த மணி உடுக் கணம் எனப் |
|
| புன்னைஅம்
பொதும்பர்ப் பூ நிறை கூடல், நும் |
|
| பொன்
அடி வருந்தியும் கூடி-- |
|
| அன்னையர்க்கு
உதவல் வேண்டும் இக் குறியே. |
25
|
|
|
உரை
|
| |
|
|