பக்கம் எண் :

104

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    பாடல்களால் ‘ திருக்களா நீழலில் எழுந்தருளிய கடவுளே ’ என்று துதிக்க நாத் தந்தருளிய தலைவனே ! வணக்கம்.  வானின்கண் (உலவும்) குளிர்ந்த (பிறைச்) சந்திரனோடு கங்கையும் சேர்ந்த பவளம்போற் செவந்த நீண்ட சடையை யுடைய மேலோனே ! வணக்கம்.  (மேருமலையாகிய) வில்லானது வளைதற்கு முன்னே முப்புரங்களைச் சுட்டெரிக்கக் கோபித்த ஒளிபொருந்திய புன்னகையைக் கொண்ட அழகனே ! வணக்கம்.

    ஈண்டும் மேலும் வணக்கம் என வருந்தோறும் ‘ உனது திருவடிகட்கு-வணக்கம் ’ என இசையெச்சம் கூட்டிப்பொருள் கொள்க.

    கனிவு உறா-கனியா என ஒரு சொல் நீர்மைப்படும்.  தந்தவா - ஈறுகெட்டு அயல்நீண்ட விளிப்பெயர்.  போற்றி-வணக்கம் ; இகரவிகுதிபெற்ற விணைப்பெயர், மறதி என்பது போல.  போற்று, பகுதி ; இ, புடைபெயர்ச்சிவிகுதி, உகரக்கேடு சந்தி.  இவ் வருந்தமிழ்ச் சொல்லின் பெருமையை எமது ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதிவரும் திருவாசக விரிவுரை 35-ம் பக்கத்திற் காண்க.  போற்றி என்பதுனுள் இகரம் செயப்படுபொருள் விகுதி எனக்கொண்டு வணங்கப் படுவது எனப் பொருளுரைத்தலும் ஒன்று.  வாழிய என்பது வாழி எனவந்தாற் போல, போற்றிய என்னும் வியங்கோள் போற்றி என வந்ததெனக் கொண்டு காக்கஎனப் பொருள் கூறலும் ஒன்று நாயினேன்-நாய், பகுதி; இன், சாரியை;  ஏன், தன்மை ஒருமை விகுதி : நாய் போல்வேன் என்பது பொருள்.  களவில் ஈசன்-களவின்கீழ் எழுந்தருளியுள்ள சிவபெருமான். வான்-வான்கண் உலவும் ; ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கன.  பனிநிலா, பண்புத்தொகை. ‘நிலாவுடன்’ என்பதில் உடன் மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு.  வார் சடை-வினைத்தொகை. சடைப் பரம-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை.  பரம, குழக ஈறுகெட்ட விளிப்பெயர்கள்.  குனிவு-