பக்கம் எண் :

30

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    இச்செய்யுள் சிவபெருமானது திருநடனச் சிறப்பைக் கூறுவது. அந்நடங்கொண்ட திருவுருவின் பெருமையை,

    வேதண்ட மேபுயங்கள் ; விண்ணே திருமேனி;
    மூதண்ட கூடமே மோலியாம் ;-கோதண்டம்
    ஒற்றைமா மேரு ; உமாபதியார் நின்றாடப்
    பற்றுமோ சிற்றம் பலம்!’

என வரும் வெண்பாவாலும் இனிதுணரப்படும். படைத்தல் காத்தல் முதலிய பஞ்சகிருத்தியங்களும்,

    தோற்றம் துடியதனில் ; தோன்றும் திதியமைப்பில் ;
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்;-ஊற்றமாய்
    ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்;முத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடு’

என்ற உண்மை விளக்கத் திருவெண்பாவிற் கூறிய வண்ணம், இத்திருக்கோல நடனத்தால் நிகழ்வனவாதலின் அந் நடனச் சிறப்புச் சொல்லுக் கடங்கா அருமையுடையத் தென்பார் ‘ திருநடம் புகலுதற் கெளிதாமோ ’ என்றார். இத் திருநடச் சிறப்பையே ‘ நாற்றடம் தோள்திசை எட்டிலும் தட்ட’ என வரும் கலித்துறையந்தாதியினும் கூறியுள்ளார்.             

(22)

23. எளியன், புன்தொழிற் பாதகன், மாதராய்
        இளமுலை வளம்வேட்ட
    களியன், தீக்குண வஞ்சகன் நெஞ்செனும்
        கருங்கலைக் கரைவித்து
    வெளியில் வந்துநின் பொன்னடி சென்னியின்
மிலைந்(து)எனை ஆட்கொண்ட
    அளிக னிந்தநின் அருட்குணம் உரைப்பதார்,
        அருங்களா அமர்ந்தோனே!

    அரிய களாமரத்தின் நீழலில் எழுந்தருளிய இறைவனே! ஏழ்மை உடையவனும், புல்லிய தொழிலேசெய்யும் பாதகனும், பெண்களது இளமைவாய்ந்த தனபோகத்தை