பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

33

    திருக்கருவையினை இடமாகக்கொண்டு எழுந்தருளிய அழகிய பரமனும், சிதாகாசமே திருமேனியாக உடையவனும், (அயன் முதலிய) தேவர்கள் காணாத தனது திருமேனியை உமையம்மை பெறப் பாகஞ்செய்து கொடுத்தவனும், பகைவர் திரிபுரங்களை நீறுபடுத்தும் பெருமை வாய்ந்த கூரிய அம்பாகத் திருமாலை உடையவனும், (தன் திருவடிக்குப் பிழைத்த) எனது பிழையைப் பொறுத்து அழியாத சிவஞானச் செல்வத்தை அழகிய நிலவுலகச் செல்வத்தோடு தந்தருளினவனும் (எவன், அவனே) இத்திருக்களா நிழலில் (வீற்றருளிய) இறைவன்.

    உடையோன்-(அனைத்தையும் தனது உடைமையாக) உடையவன்-இறைவன். அம்பரம்-ஆகாயம் (சிதாகாயம்). ஒன்னலர்-பகைவர். ‘ஒன்றலர்’ என்பதன் மரூஉ. புரம்-முப்புரம். வை அம்பு-கூரிய அம்பு. கண்ணன்-கிருஷ்ணன் ; (ஈண்டுக் கிருஷ்ணாவதாரமெடுத்த திருமாலைக் குறிக்கும்). திரு-செல்வம்.

    நீற்றல்-நீறாக்கல்-அழித்தல் நீற்று, வினைத்தொகை.

    கருவையை இடமாக உடைமைபற்றி அவனது சர்வவியாபகத்தன்மை பழுது படுமாறில்லை என்பது விளங்க ‘அம்பர மேனியன்’ என்றும், இடமும் மேனியும் கூறியதால் கண்டப் பொருள்போல் எளிதிற் புலப்படும் தன்மையன் என்று கொள்ளற்க என்பார் ‘கடவுளர் காணாத உரு’ என்றும் கூறினார். ஒருவற்கு எவற்றினும் அருமையுடையது தன் உடம்பு. ஆனது பற்றியே

    தன்உடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்
    றுன்னித் துவைத்த பொருளோ டிவைநான்கும்
    பொன்னினைப் போற்போற்றிக் காய்த்துக்க : உய்க்காக்கால்
    மன்னிய ஏதம் தரும்.

என்னும் ஆசாரக்கோவைச் செய்யுளில் தன் உடம்பை முதன்மையாக வைத்துக் கூறினார். பெருவாயின் முள்ளியார் என்னும் சங்கப்
புலவர். அத்தகைய உடம்பும் ‘கடவுளர் காணாத’ தாயின் அதன்