ஓம
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
1 |
ஓம்
சிவமயம்
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
-----
காப்பு
ஆன கருவைப் பதிற்றுப்பத்
தந்தா திச்சொல்
அலங்கல்முற்றும்
ஞான உருவாம் களவீசன்
நளின சரண
மிசைச்சாத்தத்
தான அருவி பொழி
தடக்கைத்
தறுகட் சிறுகட்
புகர்முகத்துக்
கூனல் இளவெண்
பிறைக்கோட்டுக்
குணகுஞ் சரத்தின்
அடிதொழுவாம்.
இதன் பொருள்:
திருமேனி
முற்றும் ஞானவடிவாம் களவீசனது தாமரைமலர்போன்ற திருவடிமீது திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதியான
சொல்மாலையைச் சாத்த, மதத்தை அருவிபோலச் சொரியும் நீண்ட துதிக்கையையும், அஞ்சாமையையும்,
சிறிய கண்களையும், புள்ளிவாய்ந்த முகத்தையும் வளைந்த இளமையான வெள்ளிய பிறைபோன்ற தந்தங்களையும்
உடைய குணவிநாயகருடைய திருவடிகளை வணங்குவாம்.
அந்தாதி ஆன எனக்
கூட்டுக.
|