உ
______ தெள்ளு தமிழ்அழகர் சீபதிவாழ் வார்மீது கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக் குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும் குருகூரத் தானேசங் கூர். 1 கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு நீர்கொண்ட பாயல் நிறங்கொண்டு-சீர்கொண்ட வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம் செய்யுங் கிளியரசே செப்பக்கேள்-வையமெலாம் வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை கேளா தவர் ஆர்காண் கிள்ளையே-நாளும் மலைத்திடு மாரனொற்றை வண்டிலும்இல் லாமற் செலுத்தியகாற் றேரைமுழுத் தேராய்ப்-பெலத்திழுத்துக் |