கொங்கு
மண்டல சதகம்
பாயிரம்
காப்பு
(அறுசீர்க்
கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
1.
|
பூரண மதியும் கொன்றைப் பொருனையுங்
கொல்லி வேந்தன்1
காரணப் பொருப்பும் வேரிக் கான்றுள
வணிந்த
மார்பன்
நாரணன் புகழெண் ணாறா யிரங்குடி
நலமு
மோங்கும்
வாரண முகவன் கொங்கு மண்டலங்
காப்புத்
தானே. |
(குறிப்புரை)
பூரணமதி - முழுநிலவு, நாட்டிற்கு அழகும்
குளிர்ச்சியும் தருவதாகலின் பூரணமதி என்று அதனை முற் கூறினார்.
"தாரகை கொண்கன் சீதளவின்பந்தருநாடு" என்பது அவிநாசிப் புராணம்.
(சுந்தரச்சருக்கம் - பா249) கொன்றைப் பொருனை - கொன்றைமலர்
நிறைந்த ஆம்பிராவதி நதி. கொன்றை கொன்றையாறு எனினும் ஆம்.
கொல்லிவெற்பன் எனச் சேரனுக்குக் கொல்லி மலை யுரியதாகக்
கூறப்படுதலின் கொல்லிவேந்தன் காரணப் பொருப்பும் என்றார். 'நீவிரே
விளைச்சலையுண்டாக்கி நாடு காத்தற்குரியவர்' என்று திருமாலால்
புகழப்பெற்றவராதலின் 'நாரணன் புகழெண்ணாறாயிரங்குடி' என்றார்,
வாரணமுகவன் - விநாயகக் கடவுள். கொங்கு மண்டலம் - கொங்கு
மண்டலசதகம் - ஆகுபெயர். ஓங்கும் கொங்குமண்டலம் வாரண முகவன்
காப்பு எனக் கூட்டிப் பொருள் கொள்க.
அவையடக்கம்
2.
|
கற்றவர்
தேவர் தேவர் கவிக்கடல்
கற்றோர்
முன்னே
சிற்றெறும் பதுநீர் கீறிச் சிந்துவை
நீந்து
மொப்பாய்ப்
பெற்றவர் பிள்ளை தன்னைப் பிறப்பினில்
விலக்கா
ரென்று
கொற்றவர் தேவர் போற்றுங் கொங்குமண்
டலஞ்சொன்
னேனே. |
1.
கொல்லியேந்தும் - பிரதிபேதம்
|