ஆசில் கொங்கினுக்
கணித்தி னோரிடை
வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ
ஈச னார்தமை யிலிங்க மேனியி
னேச நெஞ்சினா னினைந்து தாபித்தான்
மங்கை
பாகனை மற்றும் பிற்பகல்
சிங்க லின்றியே சிறந்த பூசைசெய்
தங்கண் மேவினா னவன்க ணாகிய
துங்க வெம்பவந் தொலைந்து போயதே.
(காந்தம்
- காவிரி நீங்கு படலம்.)
|