|
கண்ணந்தை
கோத்திர நயினா கலன்முத்துக் கார்த்திகையில்
மண்ணந்தை கோத்திரற் கமுதூட்டி வாழ்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) பார்ப்பதி - பாப்பினியென்னுமூர். இதனையடுத்துள்ளது அறநிலையமான
மடவாளகம்.
கம்பநாடர்களாயிரவருக்குணவளித்தது
(89)
|
ஆதார
மாகித் தமிழ்க்கம்ப னாடர்க ளாயிரம்பேர்
தாதாவு மென்னத் தனைநினைந் தேத்தத் தமிழ்க்கிரங்கி
ஓதாள னாண்ட பெருமான் விளங்கு முலகறிய
மாதா வெனப்புக ழன்னமிட் டான்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) தமிழ்க் கம்பநாடர்கள் - கம்பரால் தமிழ்ப்புலமை
பெற்றவர்கள்.
புலவர்களை
யுபசரித்தது
(90)
|
ஆடையு
முத்து மணிமார்ப சோழ னகளங்கன்முன்
மேடை புகழ்ந்து வரும்புல வோரை விழைந்தழைத்துக்
காடைகு லாதிபன் பூந்துறை நாடன் கனகசெல்வன்
மாடையுந் தெய்வ வமுதிட் டான்கொங்கு மண்டலமே. |
வயிறு
கீறி நிலை காட்டியது
(91)
|
தயவுறு
புக்கொளி முதலைவாய்ப் பிள்ளையைத் தாயின்முனர்த்
துயரமுந் தீர வரவழைத் தோட்டிய சுந்தரற்காய்ப்
பயரகு லாதிபன் காளி யணன்மங்கைப் பரமனுக்கு
வயிறது கீறி நிலைகாட்டு வான்கொங்கு மண்டலமே. |
|