|
100.
கவி வணக்கம்
மலர் இதழி
பைங்குவளை மென்முல்லை மல்லிகை
மருக்கொழுந்து உயர் கூவிளம்
மற்றும் உள வாச மலர் பத்திரம் சிலர் சூட
மணி முடி தனில் பொறுத்தே
சிலர் எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு
செம்முள்ளி மலர் சூடவே
சித்தம் வைத்து அவையும் அங்கீகரித்திடும் மகா
தேவ தேவா! தெரிந்தே
கலை வலார் உரைக்கு நன் கவியொடம் பலவாண
கவிராயன் ஆகுமென் புன்
கவியையும் சூடியே மனமகிழ்ந்திடுவது உன்
கடன் ஆகும் அடல் நாகமும்
அலை பெருகு கங்கையும் செழு மதியமும் புனையும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|