முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
[உலா என்பது, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப்பருவ மாதர்களும் கண்டு காதல்கூரும் வண்ணம் தலைவன் ஒருவன் தெருவில் உலாவந்தான் என்று கலிவெண்பாவாற் பாடப்படுவதாகும். உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனுடைய சிறப்பு, நீராடல், அழகு செய்துகொள்ளல், உறுதிச் சுற்றம் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறித்தெருவில் வருதல் என்னுமிவை கூறப்படும். இவ்வுலாநூல் உலாப்புறம் எனவும் பெயர் பெறும். பாட்டுடைத் தலைவனுடைய இயற்பெயர் கூறப்படுகிறபடியாலும், அவனைக் கண்டு மாதர்கள் காமுற்றதாகக் கூறுவதல்லாமல் அம்மாதர்களைப் பார்த்துப் பாட்டுடைத் தலைவன் காமுற்றதாக எங்குங் கூறப்படாமை யானும் இது புறப்பொருளைச் சார்ந்த பெண்பாற் கைக்கிளையாய்ப் பாடாண் திணையுள் அடங்கும். இதனால் இதற்கு உலாப்புறம் என்னும் பெயரும் வழங்கலாயிற்று. இவ்வுலாநூலைப் புலவர்கள் தம்மைப் பேணிய அரசர்கள் மீதும் கடவுளர் மீதும் அறிவாசிரியர்கள் மீதும் பாடுவது வழக்கமாக இருக்கிறது. நமது தமிழ் மொழியில் திருக்கைலாயஞானவுலா முதலிய பல உலாநூல்கள் உள்ளன. இவ்வுலாநூல் திருவெங்கையில் எழுந்தருளிய சிவபிரான் மீது பாடப் பெற்றது.]
காப்பு
நேரிசை வெண்பா
நாவலர்தம் வாய்வீதி நாளு முலாவருமே
தாவருநம் வெங்கையிறை தன்னுலாப் - பாவெனுமோர்
அம்பொற் றளைபூண வாழத் தகப்பட்ட
கும்பக் கடாக்களிற்றைக் கொண்டு.

தலவிசேடம்
 
1     பூமேவு செம்மற் புகழ்வடிவங் கொண்டன்ன
      பாமேவு மங்கைபுகழ் பண்பினான் - ஏமேவு
     வில்லிற் கருந்தடங்கண் மேவுஞ் சிறியநுதல்
     வல்லிக் கிடங்கொடுத்த வண்மையினான் -அல்லிமலர்
     யாணர்த் தவிசி னெகினவர சின்றளவுங்
     காணக் கிடையாத கங்கையான் - மாணப்
     பொருவரிய பூங்கட் பொறியரியாற் சென்று
     மருவரிய நற்றாண் மலரான் - விரவுசடைக்
(1)

(காப்பு) தா அரும்-கெடுதலற்ற. ஆழத்தகப்பட்ட பிள்ளையார் என்பது தலப்பிள்ளையார் பெயர். 1.0-5.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்